• Mar 29 2024

மூர்த்தி தனியாக பொருட்களை டெலிவரி செய்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவா- மீனா கொடுத்த பதிலடி- நம்பிக்கை கொடுத்த கதிர்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

புது வீட்டுக்கு எல்லோரும் ஆசைப்பட்ட மாதிரி பெயின்டினை மூர்த்தி அடிக்க சொன்னதால் கதிர் போய் என்ன என்ன கலர் பெயின்ட் அடிப்பது என்ற விபரத்தைச் சொல்கின்றார். பின்னர் கதிரிடம் மூர்த்தி மீனா கேட்ட மாதிரி பாத்ரூம் கட்டியாச் கண்ணன் கேட்ட மாதிரி தனி ரூம் கட்டியாச் இருந்தாலும் இப்போ அவங்க தான் இங்க இல்லை என சொல்லி கவலைப்படுகின்றார்.


தொடர்ந்து கடைக்குச் செல்லும் மூர்த்தி கடையில் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதோடு டெலிவரி வேலையையும் தானே பார்த்துக் கொள்கின்றார். மூர்த்தி களைக்க களைக்க டெலிவரி செய்வதைப் பார்த்த ஜீவா அண்ணன் அவ்வளவு கஷ்டப்படுகின்றதே என நினைத்து கவலையடைகின்றார்.

பின்னர் ஜீவா தன் கடையில் வேலை செய்யும் தம்பியிடம் நலம் விசாரிக்க அவன் ஜீவா கடையில் இல்லாததால் எவ்வளவு கஷ்டமாக இருக்கு என்றும் சீக்கிரம் கடைக்கு வாங்க அண்ணா என்றும் சொல்கின்றார். இதற்கு ஜீவா என் கிட்ட பேசின விடயத்தை யாருக்கும் சொல்லாதே என்னு கூறி அனுப்பி வைக்கின்றார்.


வீட்டுக்கு வந்ததும் ஜுவாவின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கே என்பதைப் புரிந்து கொண்ட மீனா ஜீவாவிடம் என்ன நடந்தது என்று சொல்லுங்க எனக் கேட்கிறார்.அப்போது மூர்த்தி தனியாக டெலிவரி செய்த விஷயத்தைக் கூறி கவலை்படுகின்றார். அதற்கு மீனா நேரில் அண்ணன் தம்பி இல்லை என்று சொல்ல வேண்டியது. ஆனால் உள்ளுக்குள்ளே அண்ணன் மேல இவ்வளவு பாசத்தோடு இருக்க வேண்டியது என்று சொல்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

இனி வரும் எப்பிஷோட்டில் கடைக்கு ஒரு புதிய நபரை ஜீவா அனுப்பி வைக்கின்றார்.இதனால் கோபமடைந்த மூர்த்தி என்னோட வேலையை எனக்கு பார்க்க தெரியும் கடைக்கு யாரும் தேவையில்லை என்று கதிரிடம் சொல்கின்றார் இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement