• Apr 25 2024

மூர்த்தியின் செயலால் கடுப்பாகும் ஜீவா: மீனாவிடம் கதறி அழுத தந்தை...பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோரஸ்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

மூர்த்தி வீட்டிற்கு வரும் ஜனார்த்தன் மகள் மீனாவின் நிலையை பார்த்து கண் கலங்கி பேசுகிறார்.பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் கடை ஆர்டருக்காக ஆட்டோ ப்ரியாக இருப்பதாக கேட்கிறான். ஆனால் அந்த வண்டியும் டெலிவரி ஒன்றுக்கு சென்றிருப்பதாக ஜீவா கூற, காரை எடுத்து கொண்டு கிளம்புமாறு மூர்த்தி கூறுகிறான். வீட்டுக்காக வாங்குன கார். அதுல எப்படின்னு கதிர் யோசிக்க, எல்லாம் நம்ம குடும்ப தேவைக்காக வாங்கினது தானே. எடுத்துட்டு போ என சொல்லி அனுப்பி வைக்கிறான். கதிர் காரில் செல்லும் போது, வழியில் இருக்கும் ஜனார்த்தன் அவனை பார்க்கிறான்.

உடனே தன்னிடம் வேலை பார்ப்பவரிடம் தனியா ஹோட்டல் வைச்சு இருக்காரு. அதான் கார்ல போறாரு என எரிச்சலான சொல்கிறான். அடுத்ததாக கண்ணன் பைக்கில் ஆபிஸ் போக, இதோ கவர்மெண்ட் வேலை பார்க்குறாரு. கார்ல போறாரு என கிண்டலடிக்கிறான். அதன்பின்னர் ஜீவா டிவிஎஸ் பைக்கில் வர்ற, அதனை பார்த்து கோபப்படுகிறான் ஜனார்த்தன்.மேலும்  அவர் இங்க வந்து இருக்கலன்னாலும் பரவாயில்லை. அவர் வீட்ல அவரை மரியாதையா நடத்துறாங்களா என கோபப்படுகிறான்.

அதனை தொடர்ந்து மீனாவை பார்க்க வீட்டுக்கு போகிறான். ஜனார்த்தனை பார்த்ததும் மூர்த்தி, தனம் அதிர்ச்சியடைகின்றனர். வீட்டில் வைத்து அவன் அசிங்கப்படுத்தியத்தை நினைத்து பார்க்கிறார்கள். அவன் வீட்டில் எல்லாரும் கர்ப்பமாக இருப்பதற்கு வாழ்த்து சொல்லிவிட்டு பேசுகிறான்.அத்தோடு மீனா தங்கச்சிக்கு கல்யாணம் வைத்திருப்பதை சொல்லி கூப்பிட, நாங்க வர ரெடியா இருக்கோம். ஆனா நாங்க சந்தோஷமா வந்துட்டு, சந்தோஷமா கிளம்புறோமா என கேட்கிறான் மூர்த்தி.

உடனே ஜனார்த்தன் என்ன மூர்த்தி குத்தி காமிக்கிறீங்களா? அன்னைக்கு ஏதோ நடந்துருச்சு. கல்யாணத்துக்கு  கட்டாயம் வாங்க. கலையை கூட்டிட்டி பத்திரிகை வைக்க வருகிறேன் என்கிறான். அதன்பின்னர் மீனாவிடம் தனியாக பேசும் போது, அவள் கஷ்டப்படுவதை சொல்கிறான்.அத்தோடு நான் சாகுறதுக்குள்ள இந்த வீட்ல நீ சந்தோஷமா வாழுறதை பார்க்கணும் என எமோஷனலாக கண் கலங்கி பேசிவிட்டு கிளம்புகிறான்.

இதனிடையில் கடையில் ஜீவா டெலிவரி வேலையும் பார்த்து கடை வேலையும் பார்த்து கஷ்டப்படுகிறான். மூர்த்தி இங்க மூனு பேர் இருக்கோம். ஹோட்டல் வரை போயிட்டு வர்றேன். அங்க கதிர் தனியா கஷ்டப்படுவான் என சொல்கிறான். அவன் போனதும் கடையில் இருக்கும் மாமா, நீ இங்க தனி ஆளா கஷ்டப்பட்டுட்டு இருக்க. அத்தோடு இவன் என்ன திடீர்ன்னு கதிர் கடைக்கு போறான். இவனுக்கு அறிவு இருக்கா இல்லையா என திட்டி தீர்க்கிறார்.

ஜீவா எதுவும் சொல்ல முடியாமல் பார்த்துக்கலாம் மாமா என கூறுகிறான். அதனை தொடர்ந்து அவன் வீட்டுக்கு வந்ததும் மீனாவை அழைத்து கொண்டு காரில் ரவுண்டு போகும் தனம் அனுப்பி வைக்கிறாள். கண்ணனும் அவர்களுடன் போக, பைக்காரன் ஒருவர் காரில் இடித்து விடுகிறான். இதனால் வண்டியில் கிராச் ஆகிவிடுகிறது. ஜீவா என்ன செய்வதென்று புரியாமல் ஆடிப்போகிறான். இத்துடன் இன்றைய எபிசோட்  முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement