• Apr 20 2024

கதிரை பேசிய ஜஸ்வர்யா...கொந்தளித்து திட்டிய முல்லை.. திடீரென முடிவெடுத்த கண்ணன்...இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோரஸ்..இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

கண்ணன் வீட்டிற்கு போறதற்கு கதிர் ரெடியாகும் போது முல்லை தானும் வாரேன் என அடம்பிடிக்கின்றார்.ஏன் இப்படி அடம்பிடிக்கிறாய் என கேட்க அங்கே ஜஸ்வர்யா தாறுமாறாய் பேசுவா அது தான் நானும் வாரேன் என்று கூறி அடம்பிடித்து செல்கின்றார்.

அதன் பின் அங்கே ஜஸ்வர்யா படுத்து இருக்க கண்ணன் டீ வந்து கொடுக்கிறார்.அதைக் குடித்துக் கொண்டு நீ வேலைக்கு போக வேண்டாம் என சொல் கண்ணனும் தானும் லீவு போட்டதாக சொல்கிறார்.

அதன் பின் கண்ணன் சமைத்து தருவதாக கூற இரண்டு பேருமே வீடியோ எடுப்பம் என்று கூறி வீடியோ எடுக்கிறார்கள்.இந்த நேரம் கதிரும் மற்றும் முல்லையும் வருகின்றனர்.

இதன் பின்னர் இருவரும் வீடியோ எடுக்க வேண்டாம் என கூறுகின்றார்கள்.இதை அண்ணன் தான் சொன்னார் என்று கூறுகிறார்கள்.அதற்கு ஜஸ்வர்யா அதுக்கு நாங்க என்ன செய்ய வேண்டும் என கேட்கின்றார்.



அண்ணன் அப்பிடி சொல்லல ஆனால் நீங்க பேர்ஷனல் விஷயத்தை சொல்ல வேண்டாம் எனத் தான் சொன்னார் என கதிர் பதுமையாக கூறுகின்றார்.அதன் பிறகும் ஜஸ்வர்யா கத்துகின்றார்.

இதனால் கோவமடைந்த முல்லை தாறுமாறாக கொந்தளித்து பேசுகின்றார்.நீ எந்த சேனல் வேணும் என்றால் எதையும் வைத்து கொள் என கத்தி பேசுகின்றார்.ஹாஸ்பிட்டலில் இருந்து கொண்டு ஏன் வீடியோ வெளியிட்டாய்.அதன் பிறகு எங்களையும் காட்டினாய் என ஜஸ்வர்யாவை தாறுமாறாக பேசுகின்றார்.

இதன் பின்னர் கத்திவிட்டு கதிரை இழுத்துக்கொன்று செல்கின்றார்.இதன் பின்னர் கதிருடன் காரில் செல்லும் போது ஜஸ்வர்யாவை திட்டிக் கொண்டு வருகின்றார்.இதனைக் கேட்டு கதிரும் கலாய்த்து வருகின்றார். பின் முல்லையை சமாதானப்படுத்துகின்றார்.

அதன் பின் ஜஸ்வர்யா கண்ணனை பேச கண்ணனும் நீ செய்தது தான் தப்பு எனிமேல் அந்த வீடியோ போடவேண்டாம் என சொல்கின்றார்.இப்படி சொல்ல இன்னமும் கொந்தளிக்கின்றார்.அதன் பின் ஜஸ்வர்யா சமாதானம் செய்து சேனலை நடத்துவதற்கு பிளான் போடுகின்றார்.அப்பிடி இருந்தும் சேனலை நிறுத்திடலாம் என கண்ணன் கூற இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement