• Apr 25 2024

மகளின் பாத்ரூமிற்கு தாப்பால் வைக்காத ஸ்ரீதேவி... ரகசியத்தைப் போட்டுடைத்த ஜான்வி கபூர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் பல ரசிகர்களின் மனங்களில் குடி கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து அந்த காலத்திலேயே பான் இந்தியா நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து இருக்கின்றார். 

அந்தவகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு நெருங்கிய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு திடீரென மரணமடைந்தார். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது அங்கு தனது தாயாரைப் போலவே பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் சென்னையில் உள்ள தனது அம்மா வாங்கிய ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் அந்த வீட்டின் வீட்டு வாசலில் இருந்து வீடியோவை தொடங்கும் ஜான்வி கபூர் முதலில் தனது தந்தை போனி கபூரின் அலுவலகம் அந்த வீட்டில் செயல்பட்டு வருவதாக கூறி அதனை சுற்றிக் காட்டி இருக்கின்றார்.


அதன் பின்னர் தனது தாய் திருமணமான பிறகு இந்த வீட்டை வாங்கியதாக கூறும் ஜான்வி அந்த வீடு தனது தாயின் நினைவாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அதனை தனது தந்தை தற்போது புதுப்பித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது ஸ்ரீதேவி வரைந்த பல ஓவியங்கள் அந்த வீட்டில் இடம்பெற்றுள்ளதையும் ஜான்வி அழகாக காட்டியுள்ளார். 


அத்தோடு அந்த வீட்டில் உள்ள நினைவுச் சுவர் ஒன்றில் தங்களது குடும்ப புகைப்படங்கள் பலவும் இடம்பெற்றுள்ளதை காட்டும் ஜான்வி, இவை அனைத்தும் தனது தாய் ஸ்ரீதேவியின் ஐடியா என சுட்டிக் காட்டிக் கூறுகிறார்.

அதில் ஸ்ரீதேவி-போனி கபூரின் திருமண புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதில் அனைவரும் டென்ஷனாக இருப்பதை பார்க்கும் போது இது ஒருவிதமான ரகசிய திருமணம் போல தெரிவதாக ஜான்வி கிண்டலாகக் கூறுகிறார்.


அதனைத் தொடர்ந்து பின்னர் மாடியில் உள்ள தனது பொழுதுபோக்கு அறையை சுற்றிக்காட்டும் அவர், அங்கு தான் ஓய்வாக இருக்கும் போது அதிக நேரத்தை செலவிடுவதாக கூறுகிறார். அதேபோல் அங்கு ரகசிய அறை ஒன்று இருப்பதை காட்டும் ஜான்வி, அந்த அறையில் என்ன இருக்கிறது என்பது குறித்து இதுவரை தனக்குத் தெரியாது என அந்த ரகசியத்தை தெரிவித்துள்ளார். 


பின்பு மொட்டை மாடிக்கு செல்லும் ஜான்வி, அங்குள்ள தனது ஜிம்மை சுற்றிக் காட்டி காட்டி, இதுதான் தனது சரணாலயம் எனக்கூறுகிறார். பின்னர் தானும், தனது சகோதரி குஷி கபூரும் வரைந்த பல அழகான ஓவியங்கள் அங்குள்ள சுவரில் வைக்கப்பட்டுள்ளதை சுற்றிக்காட்டும் ஜான்வி, தனது தாயாரால் தங்களுக்கும் இந்த ஆர்வம் வந்ததாக பெருமையுடன் கூறியுள்ளார்.


இறுதியாக தனக்கு வீட்டில் மிகவும் பிடித்த இடம் இதுதான் எனக் கூறி பாத்ரூமை சுற்றிக்காட்டும் ஜான்வி, தனது அறையில் உள்ள பாத்ரூமிற்கு தாப்பால் கிடையாது என கூறுகிறார். அதாவது நான் பாத்ரூமை பூட்டிக் கொண்டு ஏதேனும் பசங்களுடன் போன் பேசி விடுவேனோ என பயந்து எனது அம்மா பாத்ரூமில் தாப்பால் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது "அம்மா இறந்த பிறகு எனது தந்தை இந்த வீட்டை புதுப்பித்த போதும் எனது பாத்ரூமிற்கு இன்றுவரை தாப்பால் போடவில்லை" எனக் கூறி அந்த வீடு குறித்த தமது குடும்ப ரகசியத்தை அழகாகப் பகிர்ந்திருக்கின்றார் ஜான்வி கபூர்.

Advertisement

Advertisement

Advertisement