• Apr 19 2024

ஷிவினைக் கெட்ட வார்த்தையால் திட்டிய ஜனனி- குழப்பத்தில் தடுமாறிய கதிரவன்- என்னடா நடக்குது இங்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி 35 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் மகேஸ்வரி குறைவான வாக்குகளை பெற்றிருந்ததன் காரணமாக வெளியேற்றப்பட்டார். 

தற்போது வீட்டில் 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.இந்த வாரம் குறைவான வாக்குகளை குயின்சி பெற்று வருகின்றார் எனவே அவர் தான் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்காட் என்ட்ரியாக அசல் கோலாறு தான் நுழையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரைத் தவிர விஜே பார்வதியும் வைல்ட்காட் என்ட்ரியாக நுழைவார் என்று கூறப்படுகின்றது.

 நேற்றிலிருந்து வீட்டிலிருக்கும் யாரோ மணிகண்டன் மற்றும் மைனா நந்தினியின் ஷுஃவை ஒழுத்து வைத்து விட்டனர். இதனால் மைனாவும் ஒவ்வொருவராக கேட்டுப் பார்க்கின்றார் யாரும் உண்மை சொல்வதாகக் தெரியவில்லை.


எனவே பாத்ரூமுக்குள் நின்ற ஜனனிடம் சென்று ஷிவினும் மைனாவும் கேட்கின்றனர்.அப்போது ஷிவின் என் தலை மீது சத்தியம் பண்ணி சொல்லு என்று கூறும் போது ஜனனியும் எனக்கு எதுவும் தெரியாது யார் எடுத்தாங்கள் என்றும் தெரியாது என்று கூறிவிட்டு இடையில் கெட்டவார்த்தை கூறுவது போல வந்து ஒரு இதுவும் தெரியாது என்று கதையை மாற்றி விட்டார்.

ஜனனியின் கதையை சுவாரஸியமாக கேட்டுக் கொண்டிருந்த கதிரவன் அதிர்ச்சிக்குள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement