• Apr 18 2024

போலிஸாருக்கு நன்றி தெரிவித்து வீடியோ போட்ட ஜெய்பீம் பட செங்கணியின் மகள்- ஓ இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யாா மற்றும் ஜோதிகா இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவத்தின் தயாரிப்பில்  பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ய திரைப்படம் தான் ஜெய்பீம்.


இப்படத்தில் சூர்யா ,மணிகண்டன் ,லிஜோமல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ராஜிதா விஜயன் என பல நட்சத்திரப்பட்டாளங்களே நடித்திருந்தனர்.1993 ஆண்டு இருளர் சமூகத்திற்கு எதிராக நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டது.


இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு பல சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக ஒரு சமுதாயவர்க்கத்தினரை சூர்யா அவமானப்படது்தியதாக அவர் மீது புகார்கள் எல்லாம் அளிக்கப்பட்டன. இருப்பினும் அந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்த விட்டது.

இந்த நிலையில் இப்படத்தில் செங்கணி மற்றும் ராஜகண்டுவின் மகளாக அல்லி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த பேபி ஜோசிகா ஓர் வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.அதாவது அண்மையில் சென்னையில் வர்சா என்னும் 4 வயது சிறுமி கடத்தப்பட்டார். பின்னர் அவர் பொலிஸாரின் தீவிர முயற்சியினால் இரண்டு மணித்தியாலத்தில் கண்டு பிடிக்கப்பட்டார்.


இதனால் போலிஸாருக்கு நன்றி தெரிவித்தே இந்த வீடியோவை ஜோசிகா பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்


Advertisement

Advertisement

Advertisement