• Apr 20 2024

எல்லாமே மூடத்தனத்தின் உச்சம் தான்... நயன்தாராவை விளாசித் தள்ளும் பயில்வான் ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த ஜூன் மாதம் இவர் தனது காதலனான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார் நயன்தாரா. அந்தவகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் கனெக்ட் திரைப்படம் வெளியானது.

இந்தப்படமானது நெகட்டிவ் விமர்சனங்களை குவித்த நிலையில் வசூலிலும் கோட்டை விட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் நயன்தாராவின் கனெக்ட் படத்தை வச்சு செய்துள்ளார். 


அதாவது 'கனெக்ட்' திரைப்படம் எக்ஸார்சிஸ்ட் படத்தின் உடைய காப்பிதான் என்று கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன் அதில் நயன்தாரா குறித்தும் பேசியுள்ளார். அந்தவகையில் இந்தப் படம் திருமணத்திற்கு முன்பே எடுக்கப்பட்டதால் நயன்தாரா படத்தில் ஒல்லியாக முகத்தில் களையிழந்து முதிர்கன்னியாக தோற்றமளிக்கிறார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். 

மேலும் கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துவத்தை வலியுறுத்தும் படமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். தீர்க்கப்படாத நோய் கூட கடவுளால் தீர்க்கப்படும் என்று மூட நம்பிக்கையை பேசும் படமாக உள்ளது என்றும் தாறுமாறாக விளாசியுள்ளார் பயில்வான். அத்தோடு கிறிஸ்தவராக பிறந்த நயன்தாரா மதம் மாறி இந்துவான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். அதற்கு பிரயாச்சித்தம் செய்வதற்காக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் பயில்வானன் ரங்கநாதன். 


அதுமட்டுமல்லாது ரசிகர்கள் எதிர்பார்த்தது இந்தப் படம் இல்லை என்று கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா அவர்களை ஏமாற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார். மேலும் மூடநம்பிக்கையை வளர்க்கும் படம், மூடத்தனத்தின் உச்சமாக கனெக்ட் திரைப்படம் உள்ளது. ரொம்ப சுமாரான படம் தான். இந்தப் படம் கொஞ்சம் கூட கனெக்ட் ஆகவில்லை என்றும் எக்ஸார்ஜிஸ்ட் படத்தை வைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றும் அதிரடியாகக் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement

Advertisement

Advertisement