• Apr 25 2024

"ரொம்ப மகிழ்ச்சியான நாள்.. அப்பா சந்தோஷப்படுவாரு".. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எமோஷனல் வைரல் பதிவு!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பளராக இருந்து சினிமாவிற்குள் வந்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலமாக பெரும் ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக்கொண்டார். இவருடைய "டான்" படத்துக்கு பின், "ப்ரின்ஸ்" படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.



ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது மூத்த சகோதரி கௌரி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். சிறந்த மருத்துவர் விருது பெற்றிருக்கும் தனது சகோதரியை வாழ்த்தியிருக்கும் சிவகார்த்திகேயன் அந்த பதிவில்,"அனைவருக்கும் குடியரசு தின விழா நல்வாழ்த்துகள். மிகவும் மகிழ்ச்சியான நாள் இது. சிறந்த மருத்துவர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துகள் அக்கா. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அப்பா இன்னும் பெருமைப்படுவார். உங்களுடைய அர்ப்பணிப்பும் நேர்மையும் இன்னும் பல உயரத்திற்கு இட்டுச்செல்லும். லவ் யூ ஆல்வேஸ்" என குறிப்பிட்டுள்ளார்.

அதனுடன், தனது சகோதரி விருது பெறும் புகைப்படத்தையும் சான்றிதழின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement