• Apr 18 2024

"லவ் பண்றப்போ Easy-ஆ இருக்கும், ஆனா கல்யாணம் பண்ணா"..பிக்பாஸ் வீட்டில் டிடி சொன்ன விஷயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். அத்தோடு ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி உள்ளது.

இதற்கடுத்து ADK-வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில், அசிம் குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார் DD. "உங்களுக்கு சப்போர்ட் பண்றவங்க, உங்களுக்கு Vote பண்றவங்க, இந்த Hashtag எல்லாம் போடுறவங்க. தூரத்துல இருந்து உங்கள பாக்குறாங்க. இந்த ஷோல அசிம் இருக்கறதுனால விக்ரமன் இப்படி பண்றாங்க. அசிம் இருக்கறதுனால அமுதவாணன் இப்படி பண்றாரு. ஒவ்வொருத்தரோட கேரக்டர் கொண்டு வர நீங்க  பெரிய அளவுல ஹெல்ப் பண்ணி இருக்கீங்க அசிம். நீங்க தான் போய் எடுத்துட்டு வந்துருக்கீங்க. இத வெளிய இருக்குறவங்க எல்லாம் நல்லா ரசிப்பாங்க.



மேலும் ஒரு படத்துல வந்து ரஜினி சாரும் ரகுவரன் சாரும் சண்டை போட்டாங்கன்னா நம்ம பார்த்து ரசிப்போம். ரகுவரன் சார் நேரா வந்து நம்மகிட்ட அப்படி நடந்துக்கிட்டா அப்படி ரசிப்போமா?. எனக்கு இது தப்புன்னு சொல்றவங்க எல்லாம் இந்த வீட்டுக்குள்ள உங்க கூட இருக்குறவங்க.அத்தோடு  அது தான் Contrast. தூரமா இருக்குறவங்களுக்கு அது ஜாலியா இருக்கும். அது அவங்க வீட்டுல அவங்ககிட்ட நடக்கும் போது Maybe அவங்களுக்கு அது வருத்தமா இருக்கும்.


நம்மளோட 7 வயசுக்குள்ளேயே நம்ம பழகுற Pattern நமக்குள்ள Fix ஆகிடுமாம். அதுனால டக்குன்னு  பேசிடணும்ன்னு அசிம்க்கு சின்ன வயசுல Fix ஆகி இருக்கலாம்" என தெரிவித்தார்.

எனினும் இதற்கு விளக்கம் கொடுக்கும் அசிம், "இது எதுவுமே காரணம் இல்ல. நான் வெளிய இப்படி இல்லங்குறது தான் காரணமே. வெளியில நான் இத்தனை பேர் கூட பழகுனதில்ல. ஜோடி நிகழ்ச்சி வொர்க் பண்ற போது நீங்க பாப்பீங்கல்ல, நான் தனியா தான் உக்காந்துட்டு இருப்பேன். ஜாஸ்தி கூட நான் பேச மாட்டேன். அப்படி இருக்குறப்போ டக்குன்னு இப்படி பேசும் போது தான்" என அசிம் தெரிவித்தார்.


இதற்கடுத்து இறுதியில் பேசும் DD, "உள்ள இப்படி நடக்கும் போது மத்தவங்களுக்கு maybe சின்ன வருத்தம் இருக்கலாம்.மேலும்  இப்படி நம்மள வந்து சொல்றாங்கன்னு உங்களுக்கு தோணுதுல்ல, ஏன்னா கூடவே இருக்கும் போது அதான் கஷ்டம். லவ் பண்ணும் போது ஈஸியா இருக்கும், கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் கஷ்டமா இருக்கும்ல" என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement