இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர்.
தென்னிந்திய சூப்பர் ஸ்டார், தற்போது வெளிவரவிருக்கும் குட்பை திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். குட்பை திரைப்படத்தில் இவர் அமிதாப் பச்சன், நீனா குப்தா மற்றும் பாவில் குலாட்டி ஆகியோருடன் நடித்துள்ளார்.
இது தவிர, சந்தீப் ரெட்டி வாங்காவின் அனிமல் என்ற படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்திருந்தார் . இது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில், ரன்பீர் தனக்காக ஒரு இனிமையான செயலைச் செய்ததாக ராஷ்மிகா பகிர்ந்து கொண்டார், இது தன்னை செட்டில் அழ வைத்தது என்று கூறினார், மேலும் அவர் தெரிவித்ததாவது,
நாங்கள் அனிமல் படப்பிடிப்பில் இருந்தபோது, எனது காலை உணவு பற்றி நான் புகார் செய்தேன், உடனே ரன்பிர் மிக அழகாக இனிமையான காலை உணவை எனக்கு வழங்கினார். அத்துடன் அடுத்த நாள் அவர் தனது சமையல்காரரை சமைக்க வைத்தார்.
நான் உடனே அழ ஆரம்பித்தேன். ஏனனெனில் ஒரே சாப்பாடு எப்படி நன்றாக இருக்கும் என்று கேட்டேன். உடனே அவர் மன்னிக்கவும், ஆனால் இது மிகவும் நன்றாக இருக்கும்.உங்களுக்கு நல்ல சமையல்காரரை நான் கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு ரன்பிருடனான தனது சுவாரசியமான அனுபவத்தை ராஷ்மிகா பகிர்ந்து கொண்டார்
Listen News!