• Apr 20 2024

அது என்னுடைய விருப்பமே தவிர யாருடமும் திருடவில்லை- திமிராகக் கூறிய நடிகர் அக்‌ஷய் குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அக்‌ஷய் குமார்.இவர் இயக்குநர் பிஷேக் சர்மா இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் ‘ராம் சேது’. இப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகியது.

இந்த படத்தில் சத்யதேவ், நாசர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகியிருந்த இப்படம் வெற்றி பெறவில்லை.


இந்நிலையில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதால்தான் அவரால் எந்த படத்துக்கும் கவனம் செலுத்த முடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. 

இதுகுறித்து பேசியுள்ள அக்‌ஷய்குமார் “நான் ஆண்டுக்கு 5 படங்களில் நடிக்கிறேன். விளம்பரப் படங்களில் நடிக்கிறேன். அது எனது தொழில். நான் யாரிடமும் திருடவில்லை. இந்த கேள்வியே எனக்கு புரியவில்லை” எனக் கூறியுள்ளார்.இவரின் இந்த பதிவு வைரலாகி வருவதைக் காணவில்லை.

Advertisement

Advertisement

Advertisement