• Apr 19 2024

திருமணம் நடைபெறவிருந்த நேரத்தில்.... காதலனை கழட்டி விட்ட ராஷ்மிகா... வெளிவந்த நீண்டநாள் ரகசியம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சுற்றுலா சென்று வருவது வழமை.

அந்தவகையில் சமீபத்தில் சுற்றுலா செல்வதற்காக விமான நிலையம் சென்ற இவரிடம் "காந்தாரா படம் எப்படி" என ஒரு சிலர் கேள்வி கேட்டிருக்கின்றனர். அதற்கு இவர் "இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை" எனக் கூறிச் சென்றார். 


இதனைத் தொடர்ந்து இவரை நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். அதாவது கடந்த சில வாரங்களுக்கு முதல் கன்னடத்தில் வெளியான இந்தப் படத்தை ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் பார்த்து விட்டு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்ததற்காக மட்டும் அவரை வசை கூறவில்லை. 

இதற்கான உண்மையான காரணம் என்னவெனில் முதன்முதலாக ராஷ்மிகா கன்னடத் திரையுலகில் இருந்து தான் வந்தவர். அதுமட்டுமல்லாது ராஷ்மிகாவை  தான் இயக்கிய 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப் படுத்தியவரும் ரிஷப் ஷெட்டி தான். அதற்காகவாவது ராஷ்மிகா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவே இல்லை.


அதுமட்டுமல்லாது அந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடித்த கதாநாயகன் ரக்சித் ஷெட்டியுடன் காதலில் விழுந்து திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற ராஷ்மிகா திடீரென தெலுங்கு சினிமாவில் தனக்கு கிடைத்த புகழால் அவரைக் கழட்டி விட்டிருக்கின்றார்.


இதுவும் அவர் காந்தாரா' படத்திற்கு வாழ்த்துக் கூறாமைக்கான முக்கியமான காரணமாக இருக்கக்கூடும் எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எது எவ்வாறாயினும் ராஷ்மிகா மறைத்து வந்த நீண்டநாள் ரகசியம் இதன் மூலமாக உடைந்து விட்டது எனக் கூறி நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement