• Mar 29 2024

விஜய்யை மட்டும் கார்னர் செய்வது போல இருக்கின்றது- வாரிசு படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபல இயக்குநர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் ஏராளமான ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக வலம் வருபவர் தான் விஜய் .தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடக பகுதிகளிலும் தளபதி விஜய்யின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.

அந்த வகையில் இவர் தற்பொழுத தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தயாரித்துள்ளார். 


 கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே விழா காலங்களில் முன்னுரிமை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இதனை நினைவுபடுத்தும் வகையில் மீண்டும் ஒரு அறிக்கையும் வெளியானது. 

எனவே தெலுங்கில் வாரிசு திரைப்படம் ரிலீஸாவதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னணி இயக்குநர் லிங்குசாமி மற்றும் இயக்குநர் பேரரசு இருவரும் தளபதி விஜய் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். 


திரைப்பட விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குநர் லிங்குசாமி, “இந்த நிலை மாறாவிட்டால் வாரிசுக்கு முன் பின் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும் இதனை விரைவில் சமூகமாக பேசிட்டு தீர்வு காண வேண்டும்” என தெரிவிக்க, “இயக்குநர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என அனைவரும் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் தளபதி விஜய் அவர்கள் மட்டுமே தமிழிலிருந்து சென்ற நடிகர் எனவே இந்த நிலைப்பாடு தளபதி விஜய் அவர்களை கார்னர் செய்வது போல் இருக்கிறது என இயக்குநர் பேரரசு அவர்கள் தெரிவித்துள்ளார். அத்தோடு தளபதி விஜய்க்காக தமது குரலை தொடர்ந்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement