• Apr 25 2024

இவரைப் போல இன்னொருத்தரை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்- மனோபாலாவின் மரணம் குறித்து வேதனை தெரிவித்த சத்தியராஜ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக, அவர் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என ரசிகர்களாலும் திரையுலக பிரபலங்களாலும் நன்கு அறியப்பட்டவர் மனோபாலா.

இந்நிலையில்  கடந்த 15 நாட்களாகவே மனோ பாலா உடல்நிலை பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார்.அவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கான சிகிச்சையை  மேற்கொண்டனர்.  நோயின் தாக்கம் அதிகரித்ததால் வீட்டில் இருந்தே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.


 இந்நிலையில்  இன்று காலை சிகிச்சை பலனின்றி மனோபாலா உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதனால் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தற்போது நடிகர் சத்யராஜும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.அந்த வீடியோவில் பேசிய நடிகர் சத்யராஜ், மனோபாலா நானெல்லாம் சினிமாவில் ஒரே காலக்கடத்தில் தான் வந்தோம். அவர் போல இன்னொரு மனிதரை காண்பது கஷ்டம். என் அன்பு நண்பரும், இயக்குநரும் நடிகருமான மனோபாலாவின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 


அவர் இயக்கத்தில் பிள்ளை நிலா, மல்லுவேட்டி மைனர் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். என்ன சொல்றதுன்னே தெரியல.. அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல கலைஞர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறிக் கொள்கிறேன் என நடிகர் சத்யராஜ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement