• Mar 29 2024

பண்டிகை நாட்களில் இதை செய்வது நல்லதாம் எனவே நான் ரொம்ப பிஸி- ஓபனாகப் பேசிய நடிகை ஹன்சிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னண நடிகையாக வலம் வருபவர் தான் ஹன்சிகா. இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.இது இவருடைய 50வது படமாகும். இதனைத் தொடர்ந்தும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த டிசம்பர் 4-ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்ட இவர் ஹனிமூன் கொண்டாட வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றார்.இங்கே எடுக்கும் புகைப்படங்களையும் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார். இது தவிர  ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார். 


ஹன்சிகா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், ''பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனது அம்மா சிறுவயதிலேயே எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார். நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்றும் அவர் கூறுவார். அதனால்தான் நான் கதாநாயகி ஆன பிறகு குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டேன்.

இப்போது 31 குழந்தைகள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.


கடவுளின் ஆசி இருப்பதால்தான் என் வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. திருமணமான பிறகு சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றேன். 20-ந் தேதி முதல் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட போகிறேன். கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இரண்டு வெப் தொடர்கள் உள்ளன. எனவே நான் மிகவும் பிசி'' என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement