• Apr 19 2024

கோபிக்கு வேலை செய் என கட்டளை இடும் ஈஸ்வரி.. பாக்கியா கொடுத்த அதிர்ச்சி – ராதிகாவால் பயத்தில் உறைந்த கோபி..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 தூக்கத்தில் இருந்து எழுந்த ராதிகா நைட் எல்லாம் சரியா தூங்கவே இல்ல அதனால தான் லேட் ஆயிடுச்சு என கோபி கிட்ட சொல்லிக் கொண்டிருக்கிறார்.மறுபக்கம் கிச்சனுக்கு வரும் ஈஸ்வரி பாக்கியாவிடம் கொஞ்சம் காபி போட்டு கொடுக்கிறியா என கேட்க அவர் இப்பதான் குடிச்சீங்க யாருக்கு அத்தை என கேட்கிறீங்க எனக் கேட்கின்றார்.. உடனே ஈஸ்வரி கோபி காபி எடுத்துட்டு குடிக்காமல் போனது மனசுக்கு கஷ்டமா இருக்கு என சொல்லி போட்டுக் கொடுக்க சொல்ல பாக்கியா காபி மட்டும் போட்டு கொடுத்தா போதுமா இல்ல எடுத்துட்டு போய் கொடுக்கணுமா என கேட்க ஈஸ்வரி காபி மட்டும் போட்டு கொடு போதும் என சொல்கிறார்.


ஆனால் பாக்யா முடியாது அத்தை உங்களுக்காக ஏதாவது செய்யணுமா செய்யுறேன் இல்ல இந்த வீட்ல இருக்க மத்தவங்களுக்காக ஏதாவது செய்ய சொல்றீங்களா செய்யறேன் ஆனா அவங்களுக்காக எதுவும் செய்ய முடியாது. இதுவரைக்கும் செய்ததெல்லாம் போதும் என கோபமாக  கூறுகிறார். இதன் பிறகு ஈஸ்வரி செல்வியிடம் கேட்க நான் வேலையை விட்டு கூட போவேன் ஆனால் அவருக்காக எந்த வேலையும் செய்யமாட்டேன் என முராளாக பதில் சொல்கிறார்.

அதன் பின்னர்  ஜெனியிடம் கேட்க ஜெனி நான் போட்ட காப்பிய என்னாலயே குடிக்க முடியாது என சொல்கிறார். இதனை அடுத்து இனியாவிடம் கேட்க பாட்டி எனக்கு காபி போட்டு கொடுத்தா குடிக்க தெரியும் காபி போடத் தெரியாது என சொல்லி விடுகிறார். இதனால் ஈஸ்வரி தானாகவே சென்று காபி போட்டு இனியாவிடம் கொடுத்து கோபிக்கு கொடுக்க சொல்கிறார்.

இனியா காப்பியை எடுத்து வந்து ரூமின் கதவை தட்ட கதவை திறக்கும் ராதிகா காபியா என வாங்க போக உங்களுக்கு இல்ல டாடிக்கு என சொல்லி எடுத்து வந்து கோபி கையில் கொடுத்துவிட்டு ஸ்கூலுக்கு டைம் ஆகுது என இனியா கிளம்பி விடுகிறார்.

இதன் பின்னர்  கோபி ரசித்து ருசித்து காப்பியை குடிக்க போக ராதிகா அதை தட்டி விட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். இங்க ரெண்டு பேரு இருக்கோம். உங்களுக்கு மட்டும் காபி கொடுத்தால் என்ன அர்த்தம்? போட்டுக் கொடுத்தவர்களுக்கு அறிவில்லையா இல்ல என்ன விட்டுட்டு குடிக்க போற உங்களுக்கு அறிவில்லையா என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.


இதன் பிறகு நான் உங்களுக்கு காபி போட்டு வரேன் என சொல்லி கீழே வரும் ராதிகா காப்பி போட பால் எடுக்க ஈஸ்வரி அது எங்க வீட்டுப் பொருள், கண்டவங்க காபி போட்டு குடிக்க கிடையாது என சொல்ல ராதிகா பால் பாக்கெட் வைத்துவிட்டு வெறும் பிளாக் காபி போட்டு எடுத்துச் சென்று கொடுக்கிறார்.

அத்தோடு கோபி குடிக்க தயங்கிக் கொண்டிருக்க முதலில் குடிக்கும் ராதிகா ரொம்ப கசக்குது என எடுத்து போய் ஊற்றி விடுகிறார். கோபியும் கீழே ஊற்ற போக சத்தம் போடும் ராதிகா உங்களுக்காக ஆசையா போட்டு வந்தேன் குடிங்க என சொல்லி குடிக்க வைக்கிறார்.


இதனால் வேறு வழி இல்லாமல் அந்த காபியை குடிக்கும் கோபி பிறகு பாத்ரூமுக்குள் சென்று வாந்தி எடுத்து வாழ்க்கையில் தான் ஸ்வீட் இல்ல, காபில கூடவா ஸ்வீட் இருக்கக் கூடாது என புலம்ப ராதிகா என்ன பண்றீங்க என சத்தம் போட நிம்மதியா புலம்ப கூட விட மாட்றா என தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement