இந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் எந்த ஒரு குடும்பப் பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் என பன்முக கலைஞராக திகழ்ந்து வருகின்றார்.
தமிழ் சினிமாவில் எப்போதும் பிஸியாகவே நடித்து வருகின்ற விஜய் சேதுபதிக்கு சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்துமே தொடர் தோல்வியை சந்தித்திருந்தன. இதனால் இவர் ஹீரோ என்ற கதாபாத்திரத்திலிருந்து விலகி ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் வில்லன் என்ற வேடத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாது விஜய்யின் 'மாஸ்டர்'படத்திலும் வில்லனாக நடித்து பெரியளவிலான வெற்றியை பெற்றிருந்தார்.
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் இந்தியன் 2, தேவர் மகன் 2 போன்ற படங்களிலும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிக்க வேண்டும் என உலக நாயகன் கேட்டுக் கொண்டாராம். ஆனால் விஜய் சேதுபதி நான்கைந்து படங்களை கையில் வைத்திருப்பதாகவும் 3 வருடத்திற்கு பிறகு தான் அடுத்த படங்களில் கமிட்டாகுவன் என இயக்குநர்களிடம் தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் விஜய் சேதுபதி அந்தப் படத்திற்கு பின்னர் ஹிந்தியில் 2 படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்கின்றாராம். அதுமட்டுமல்லாமல் இந்தப் படங்களுக்குப் பிறகு 5 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.
அதாவது இவர் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ என்ற படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கும் படத்திலும், அதைத்தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குநர் கோகுலின் படத்திலும், ‘கடைசி விவசாயி’ படத்தின் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் இவரிடம் ஒரு கதையை கூறியிருக்கின்றார். அக்கதையிலும் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒத்துக் கொண்டுள்ளார். இவ்வாறாக தொடர்ந்து 5 படங்களில் தற்போது மட்டும் கமிட்டாகி இருக்கிறார் நம்ம விஜய் சேதுபதி.
சமீப காலமாக ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்தாலும் முன்னணி நடிகர்களை போலவே அவருக்கும் பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணமே இருக்கிறது.
பிற செய்திகள்
- நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்
- அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்
- எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே தீபிகா தான்-நடிகர் ஷாருகான்
- நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ராஜா ராணி சீரியல் நடிகையா..? இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதோ..!
- தற்கொலைக்கு முயற்சி செய்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!