• Apr 24 2024

கிளி சர்ச்சையில் ரோபோ சங்கர் மாட்டிக் கொள்ள விஜய் டிவி புகழ் மற்றும் பாலா தான் காரணமா?- இது தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு கிளிகளை வளர்த்து வருவதாக அறிந்த வனத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டு அந்த கிளிகளை பறிமுதல் செய்தனர். 

அந்த சமயத்தில் ரோபோ சங்கரும், அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்ததால், அவர்கள் இந்தியா திரும்பியதும் விசாரணை நடத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


அதன்படி அண்மையில் சென்னை திரும்பிய ரோபோ சங்கரிடம், இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இது போன்ற வெளிநாட்டு கிளிகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதமானது என தனக்கு தெரியாது என ரோபோ சங்கர் கூறி இருக்கிறார்.

 இருந்தாலும் சட்டப்படி அதற்கு அனுமதி இல்லை என்பதனால் ரோபோ சங்கருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதுவும் ரூ.2.5 லட்சம் ரூபாயாம்.இதனை கட்ட ரோபோ சங்கர் சம்மதித்தும் விட்டார். இப்படியான நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாக  யூடியூப் மூலமாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறமைகளை பதிவிட்டு அதன்மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஹோம் டூர் வீடியோ எடுத்து வீட்டில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெளிவாக காட்டி வருகிறார்கள். 


அந்த வகையில் சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டுக்கு விஜய் டிவி புகழ் மற்றும் பாலா சென்றிருக்கிறார்கள். பின்பு அவர் ஹோம் டூர் மூலமாக அவரது வீட்டை சுற்றி எடுக்கப்பட்டு ஒவ்வொரு விஷயங்களையும் சேனலில் போட்டு உள்ளனர். அப்படித்தான் ரோபோ சங்கர் வீட்டில் இரண்டு கிளி இருப்பதை எதார்த்தமாக வீடியோ எடுக்கப்பட்டு வெளியிட்டார்கள்.

இந்த வீடியோவை பார்த்த வனவிலங்கு அதிகாரிகள் அதில் இருக்கும் கிளியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அந்த கிளி எந்த வகையானது என்றால் அலெக்ஸாண்டரின் கிளி என வகைப்படும். அந்த கிளி யாரும் அனுமதியில்லாமல் வீட்டில் வளர்க்கக்கூடாது என்றும் அது சட்டத்துக்கு விரோதமான செயல் என்றும் கூறியுள்ளனர்.


இது எல்லாத்துக்கும் காரணம் விஜய் டிவி புகழ் மற்றும் பாலா தான். தேவையில்லாமல் ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்று அந்தக் கிளியை வீடியோ எடுத்து வெளியிட்டதனால் இப்பொழுது ரோபோ சங்கர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு அபராதத்தையும் கட்டி உள்ளார். இது தெரியாம பாலா இந்த கிளியை எனக்கும் தருவீங்களா என்று கேட்டிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement