சீரியலுக்கு பேர் போன சேனல்களில் ஒன்று சன் டிவி. அதாவது இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறான சீரியல்களில் ஒன்றுதான் 'அன்பே வா'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது.
அந்த சீரியலில் ஹீரோவான வருணைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. இந்த சீரியலில் இவருக்கும் ஹீரோயினுக்கும் இடையில் இடம்பெறுகின்ற கெமிஸ்ட்ரி ஆனது எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்து விட்டது. அதுமட்டுமல்லாது இவரைப் பார்ப்பதற்கு வெள்ளித்திரை ஹீரோ போலவே இருப்பதாக பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த சீரியலில் வருண் கிருஷ்ணன் என்ற பெயரில் நடித்து வருபவரின் உண்மையான பெயர் விராட். இவரை கன்னடத்தில் உள்ள பலருக்கும் ஒரு நடிகராக அதிகளவில் தெரிந்திருக்கும். இவர் 'அன்பே வா' சீரியலில் நடித்து வரினும் தமிழில் 'பேரழகி' என்ற சீரியல் மூலமாகத் தான் அறிமுகமானார்.
இவருக்கு அம்மா, அப்பா வைத்த பெயர் நவீன் குமார். இவர் கன்னட மாநிலத்தை சேர்ந்தவர். நவம்பர் மாதம் 14 ஆம் திகதி 1989 இல் கர்டாக்கில் பிறந்தவர். இவர் சிறு வயது முதலே "நன்றாகப் படிக்கணும், நல்ல வேலை செய்யணும்" போன்ற ஆசைகளைக் கொண்டிருந்தார்.
இவரை வளர்த்தது இவரின் அம்மா தான். ஏனெனில் இவரின் அப்பா இவர் சிறுவயதில் இருக்கும் போதே விட்டிற்று ஓடிப் போய்ட்டார். இவரின் அப்பா பெயர் பிரமேஷ். அம்மா பெயர் உமாதேவி. இவரின் அம்மாவின் அறிவுரைகள் மூலமாகத் தான் இவர் இந்தளவிற்கு வளர்ந்து இருக்கின்றார்.
தன்னுடைய அம்மாவை இவர் 'அயன் லேடி' என்றே அழைத்து வருவார். இவங்க ஒரு மெடிக்கல் ரெகோடர் ஆபிஸராக இருந்திருக்கின்றார்.ஒரு டெக்னீசயனாக குறைவான சம்பளத்திலேயே இருந்த இவரின் அம்மா ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை தான் இவருக்கு கொடுத்திருக்கின்றார். ஆனாலும் தன்னுடைய மகனை ராஜா மாதிரி வளர்த்து வந்தார்.
இவருடைய அம்மா இவரை ஒரு நடிகராகப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதனால் அந்த ஆசையையே தன்னுடய கனவாகவும் கொண்டிருந்தார் விராட். அதிலும் குறிப்பாக வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டமையினால் அதற்காக நிறைய முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றார்.
அவ்வாறு இருந்தாலும் படிப்பிற்கும் முக்கியம் கொடுக்குமாறு அவரது அம்மா கூறி வந்தார். பள்ளிக் காலத்திலும் இவர் சுட்டிப் பையனாகவும் நன்றாகப் படிக்கக் கூடிய ஒருவராகவும் விளங்கி இருக்கின்றார். 'ட்ரீம் பிக்' என்ற இவரின் அம்மாவினுடைய வார்த்தைக்கு ஏற்பவே வாழ்ந்து வந்தார்.
இவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் 2009 இல் இவருக்கு ஒரு பட வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் அவருக்கு ஈஸியாக கிடைக்கவில்லை. அம்மாவின் கனவு என்பதனால் அதற்கு ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் இவரின் குடும்ப உறவுகள் சினிமா தொடர்பாக எதிர்மறை விமர்சனங்களை முன் வைத்து இவர்களைத் திட்டி இருக்கின்றனர்.
ஆனாலும் அது எதையுமே பொருட்படுத்தாத அம்மா மகனின் ஆசைக்கு தடை போடாது அவரை சினிமாவிற்குள் அனுப்பி வைத்தார். அதன் மூலமாக 2009 இல் 'ப்ளாக்' என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு ஒரு சில பட வாய்ப்புக்கள் வருவதை பார்த்துவிட்டு அவரை சீரியலிலும் நடிக்க அழைத்தார்கள். அந்தவகையில் 2014 இல் 'சுபவிவகா' என்ற சீரியல் மூலம் ஜீ கன்னடத்தில் அறிமுகமானார். 2 வருடமாகத் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்தமையால் தொடர்ந்தும் பேமஸ் ஆனார்.
அதனைத் தொடர்ந்து 'நிகாரிகா' என்ற சீரியல் மூலமாக விராட் என்ற பெயரில் ரொம்பவே பேமஸ் ஆனார். இதனால் நவீன் என அழைத்தவர்களும் அன்றுமுதல் இவரை விராட் என்றே அழைக்கத் தொடங்கினர். ஆனால் இன்றுவரையும் இவரின் அம்மா இவரை நவீன் என்றே அழைத்து வருகின்றார்.
இந்த சீரியலினைத் தொடர்ந்து தமிழில் 'பேரழகி' சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதில் ஹீரோவாக நடித்து ஒரு ஆக்டராக தன்னுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதனை வாழ்ந்து காட்டியிருக்கார்.
அதனைத் தொடர்ந்து 'அன்பே வா' சீரியலில் நடிக்கத் தொடங்கியிருக்கின்றார். இதற்கு இவரின் அம்மா "நீ படத்தில் நடித்துப் பேமஸ் ஆனதை விட அன்பே வா சீரியலில் கமிட்டானது தான் பெரிய விஷயம். இந்த சீரியலை விட்டு போக கூடாது" எனக் கூறியிருக்கின்றார்.
அதன் பின்னர் 'அபியும் நானும், கண்ணான கண்ணே' சீரியல்களில் நடித்திருக்கின்றார். இவருக்கு திருமணம் பற்றி எந்த ஒரு ஐடியாவும் இப்போதைக்கு இல்லையாம். இவரின் அம்மாவும் இவரின் திருமணத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.
Listen News!