• Apr 18 2024

அஸ்வின் மீது ரசிகர்கள் கொண்ட கோபம்…இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குக்வித்கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அஸ்வின்.

அந்நகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை பெற்ற இவருக்கு பட வாய்ப்பு அதிகம் குவிந்து வருகின்றது என்று தான் கூற வேண்டும்.

அவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரையில் வெளியானது. ஆனால் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசியது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவரை வைத்து பல ரசிகர்களுகம் மோசமாக விமர்ச்சித்து வந்தனர்.இப்படத்தின் விழா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

மேலும் அவ்விழாவில் அஸ்வின், எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதை கேட்டு துங்கியுள்ளேன். ஆனால் நான் கேட்டு தூங்காத ஒரே ஒரு கதை என்ன சொல்ல போகிறாய் மட்டுமே. அதன் காரணமாகத்தான் இப்படத்தில் நடித்தேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த பேச்சினால் அஸ்வின் சம்பாதித்த ரசிகர்களின் எண்ணிக்கையும் புகழும் குறைய துவங்கின. அத்தோடு இவரின் இந்த பேச்சுக்கு பல கண்டனங்கள் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த இப்படம் இதன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் இந்த பேச்சுக்கு வருந்திய அஸ்வின் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் ரசிகர்கள் இவரை சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கலுக்கு வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்படம் வெறும் ௦.99 TRP ரேட்டிங்கை மட்டுமே பெற்றது.அத்தோடு மிகமோசமான TRP ரேட்டிங்கை பெற்ற அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு இன்னமும் அவர் மீது கோபம் குறையவில்லை என்றே தெரிவது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement