• Apr 25 2024

வீட்டை எதிர்த்து தேவயானி திருமணம் செய்யக் காரணம் இதுதானா..? முதன்முறையாக உண்மையைக் கூறிய நடிகை..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய ஒரு முக்கிய நடிகை தான் தேவயானி. காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் கமலி என்ற வேடத்தில் நடித்த இவர் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். மேலும் அழகான புடவை, தாவணியில் நடித்திருந்தாலும் உச்ச நடிகையாக உயர்ந்திருக்கின்றார்.


இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே இயக்குநர் ராஜகுமார் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்களும் இருக்கினற்னர். 


திருமணத்தைத் தொடர்ந்து தேவயானி வெள்ளித்திரையை விடுத்து சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். 

இந்நிலையில் தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் மீது காதலில் விழுந்தமைக்கான காரணமும், வீட்டை எதிர்த்து திருமணம் செய்தமைக்கான காரணமும் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் ராஜகுமாரன் இயக்கிய படம் தான் 'நீ வருவாய் என'. இப்படத்தில் தேவயானி நடிக்கும் போது தான் ராஜகுமாரன் மீது அவருக்கு காதல் வந்திருக்கிறது. 


இப்படத்தினைத் தொடர்ந்து விக்ரம் மற்றும் தேவயானியை வைத்து 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' என்ற திரைப்படத்தை இயக்கினார் ராஜகுமாரன். அந்த படப்பிடிப்பில் தான் ராஜகுமாரின் அன்பு அமைதி உழைப்பு பார்த்து தேவயானிக்கு ராஜகுமார் மீது மேலும் அதிக காதல் ஏற்பட்டதாம். 

இதனையடுத்து ராஜகுமாரின் மீது அதிக நம்பிக்கையும் வரத் தொடங்கியிருக்கின்றது. இவ்வாறு ராஜகுமாரின் மீது இருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணமாம். மேலும் "என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் கடைசி வரைக்கும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் அவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறியிருக்கின்றார் தேவயானி.

Advertisement

Advertisement

Advertisement