• Apr 20 2024

அமலாவிற்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு... கோபத்தில் தாறுமாறாக திட்டும் மக்கள்.. காரணம் இதுவா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலா. சினிமாவில் படு பிஸியாக நடித்து வந்த இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


இந்நிலையில் அமலா தற்போது பிராணிகள் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வருகிறார். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தெருநாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பும் பெற்றுள்ளார். இதனால் ஐதராபாத் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களை பிடிப்பதை பஞ்சாயத்து மாநகராட்சியினர் நிறுத்திவிட்டனர். 


இதையடுத்து அமலாவுக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து வெளியான பதிவுகளில், "அமலா வழக்கினால் தெருநாய்களை பிடிப்பதை நிறுத்தி உள்ளனர். இதனால் சாதாரண மக்களும், குழந்தைகளும் தெருநாய் கடியில் சிக்குகிறார்கள். தெருநாய்கள் கடிப்பதை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றால், அவர்கள் அமலா வழக்கில் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை காட்டி எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கைவிரிக்கிறார்கள். 


இதனால் எம்மில் பலர் வேதனையில் இருக்கிறோம். கடிக்கும் தெருநாய்களை உங்கள் வீட்டின் முன்னால் கொண்டுவிடட்டுமா. அப்போதுதான் எங்கள் வேதனை உங்களுக்கு புரியும்'' என்று தெரிவித்து உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement