• Mar 28 2024

வெளிவந்த குணசேகரனின் சுயரூபம்- எதிர்த்துப் பேசும் குடும்பம்- அட பாவிங்களா எல்லாமே இதுக்குத்தானா.? இறுதியில் நடந்த டுவிஸ்ட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்தடுத்து அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் இந்த வாரத்தில் ஆதிரையின் திருமண விஷயத்தில் குணசேகரன் எடுத்திருக்கும் முடிவிற்கு யாரெல்லாம் எதிராக பேசினார்களோ அவர்களை எல்லாம் வார்த்தையாலே தாறுமாறாக குணசேகரன் வசைப்பாடி தன்னுடைய சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

மேலும் இதுவரைக்கும் தம்பிகள் தான் எனக்கு உலகம். தம்பிகளுக்காக தான் நான் வாழ்கிறேன் என்று நடித்துக் கொண்டிருந்த குணசேகரனின் சுயரூபம் தற்போது அவரின் தம்பிகள் ஒவ்வொருவருக்கும் தெரிய வந்து கொண்டிருக்கிறது. 


இதனைத் தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யாவின் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து அடுத்த பிரச்சனை வீட்டில் ஆரம்பித்து இருக்கிறது. ஏற்கனவே ஆதிரை திருமண விஷயம் இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று குணசேகரன் கூறுகின்றார்.

இதனால் குழந்தைக்காக நான் என்ன செய்யப் போகிறேன் என்று ஞானம் ஒரு பக்கம் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றார். மேலும் ஜனனி தன்னால் முடிந்ததை செய்யலாம் என்று நினைத்தாலும் அதையும் செய்யக்கூடாது என்று குணசேகரன் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.


இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனியிடம் ரேணுகா "நீ வயசில் ரொம்ப சின்னவளாக இருந்தாலும் நிறைய பேருக்கு நீ அம்மா தான். என்னுடைய குழந்தையையும் சேர்த்து தான் சொல்கிறேன்" என்று கூறுகிறார். 

அதன் பின்னர் மறுபக்கம் ஐஸ்வர்யாவின் தோழிகளை சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஜனனி கூட்டிக்கொண்டு வந்து இரவில் 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். சத்தம் கேட்டு குணசேகரன் கீழே வந்து ஏ... ஐஸு... யாரு இந்த பிள்ளைங்க எல்லாம் என்று கேட்கின்றார். 


அதற்கு ஐஸ்வர்யா இவங்க எல்லாம் என்னுடைய பிரண்ட்ஸ். அவங்க பற்றி எல்லாம் எதுவும் நீங்க பேசாதீங்க, உங்களுக்கு பிடிக்கலன்னதால் தான் நாங்க வெளியே போயிருந்தோம் என்று சொல்ல, இந்த குழந்தையும் இப்படி பேசுகிறதே என்று வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் திகைத்து வாயில் கை வைத்திருக்கின்றனர். இதனைக் கேட்டு குணசேகரன் முறைத்தபடியே நிற்கிறார். 


இந்த ப்ரோமோ ஆனது தற்போது ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. அதாவது நேற்றைய ப்ரமோவில் தாரா குணசேகரனை திட்டி இருந்தார். இதனையடுத்து இன்று ஐஸ்வர்யா திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொருவராக குணசேகரனை திட்டி வருகின்றனர். இந்நிலையில் இனி குணசேகரனை யார் எல்லாம் திட்டப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

மேலும் இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் இந்த ப்ரோமோ வெளியாகி 18 மணி நேரத்திற்குள் ட்ரெண்டிங்கில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாது இந்த ப்ரோமோவை இதுவரைக்கும் 1.4 மில்லியன் ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். இதற்கு காரணமே ஏற்கெனவே ஞானத்தை குணசேகரன் திட்டிய ப்ரோமோவும், அதேபோல் தாரா குணசேகரனை திட்டிய வீடியோவும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டிருந்தது. இதனால் தான் தற்போது ஐஸ்வர்யாவையும் குணசேகரனை திட்ட வைத்து அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement