• Apr 19 2024

அடடே நம்ம லைலாவா இது?- இன்னும் அப்படியே இருக்காங்க - பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிய கள்ளழகர் என்னும் திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை லைலா. இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்குப பார்த்தேன் ரசித்தேன் திரைப்படம் தான் சிறந்த திருப்பு முனையாக அமைந்தது.

மேலும் இவர் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்று நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தான் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தில்,தீனா,உன்னை நினைத்து என வரிசையாக ஹிட் கொடுத்த நடிகை ஆவார்.

திருமணத்திற்குப் பிறகு சில காலம் படவாய்ப்பின்றி இருந்த இவர் தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருவதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் இது தவிர சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது இவர் தனக்கு மல்லிகை பூ கொடுத்த பெண்ணிற்கு நன்றி தெரிவித்து இணையத்தின்பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார், எப்போதுமே நடிகைகள் என்று சொன்னாலே தான் இருக்கும் இடத்திற்கு தேவைப்படும் பொருள் வந்து சேரணும் என்று தான் நினைப்பார்கள், ஆனால் அப்படி இல்லாமல் நடிகை லைலா தன் காரில் இருந்து இறங்கி தனக்கு பூ தேவைப்பட்டதால் தானே முன் வந்து பூ கடைக்கு சென்று அங்கு அந்த பூ விற்கும் அக்காவிடம் சில நேரம் பேசிவிட்டு பின்னர் கிளம்பியுள்ளார்.

முக்கியமாக அந்த பூ விற்கும் அக்காவுடன் தரையில் அமர்ந்து பேசியுள்ளார் நடிகை லைலா. ஆனால் இது நாள் வரைக்கும் எந்த ஒரு நடிகையும் இப்படி செய்ததே இல்லை,தமிழ் மக்கள் அன்பும் பண்பும் மிகுந்தவர்கள் ஆவார்கள்.இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லைலா இன்னும் அப்படியே இருக்காங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement