• Apr 19 2024

நோயால் அவஸ்தைப்படும் சமந்தாவுக்கு இந்த கொடுமை வேறையா..புலம்பும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் பட வாய்ப்புகள் பறிபோவதாக தகவல் தற்போது  வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. எனினும் தற்போது பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். பாலிவுட்டில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.

இதனிடையே சமந்தா நடிப்பில் சமீபத்தில் யசோதா திரைப்பட்ம் வெளியானது. மேலும் இந்தப் படம் செம ஹிட் அடித்து வருகின்றது. சமந்தாவின் சோலோ பர்ஃபாமன்ஸில் வசூல் வேட்டையாடி வருகிறது யசோதா திரைப்படம்.

மேலும் இந்தப் படத்தின் ப்ரமோஷன்களின் போதுதான் தனக்கு Myositis என்ற தசை அழற்சி நோய் இருப்பதாக தெரிவித்தார்  சமந்தா. இதனால் எழும்போது ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியாதளவுக்கு வலி ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார் சமந்தா. இதுபோற்றி நேர்க்காணல் ஒன்றிலும் பேசி கண்ணீர் விட்டார் சமந்தா.

சமந்தாவின் நோய் பாதிப்பு குறித்து அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறுஇருக்கையில் நடிகை சமந்தாவின் பட வாய்ப்புகள் பறிபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு அதாவது புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஊ சொல்றியா ஊஹு சொல்றியா என்ற அந்த ஐட்டம் பாடல் உலக அளவில் செம ஹிட்டானது. இதையடுத்து புஷ்பா இரண்டாம் பாகத்திலும் சமந்தா ஒரு ஐட்டம் பாடலில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சமந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பாடலில் நடனமாட நடிகை காஜல் அகர்வாலை படக்குழு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் கவுதம் கிச்சுலு என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்தார். மேலும் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement