• Apr 24 2024

ரஜினிகாந்த் அடம்பிடித்து அந்தப் படத்தில் நடிப்பதற்கு இந்த நடிகர் தான் காரணமா?-இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இதற்கு பிறகு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்து ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார்.

சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டம் முதலே கடவுள் ராகவேந்திரர் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் ரஜினிகாந்த். தனது 100வது திரைப்படம் நடிக்கும்போது ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றையே கதையாக நடித்தார். ரஜினிகாந்த் ராகவேந்திரர் மீது இவ்வளவு ஈடுபாடாக இருப்பதற்கு காரணமாக இருந்தவர் அப்போதைய கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்கள்தான்.


சொல்ல போனால் நடிகர் ரஜினி ராஜ்குமாரின் பெரிய விசிறி. ராஜ்குமாரின் நடிப்பை பார்த்துதான் ரஜினி வளர்ந்தார். அவரை பார்த்துதான் இவர் நடிகர் ஆவதற்கே ஆசைப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமார் ராகவேந்தர் மீது பக்தி கொண்டவர். ஏற்கனவே கன்னடத்தில் ராகவேந்தரரின் கதை மந்த்ரலயா மகத்மே என்னும் பெயரில் படமாக்கப்பட்டது.


அதில் ராஜ்குமார்தான் ராகவேந்திரராக நடித்தார். அதை பார்த்தபோதே ரஜினிக்கும் ராகவேந்திரராக நடிக்க ஆசை இருந்து வந்தது. எனவே தனது 100 ஆவது திரைப்படத்தில் அவர் அந்த ஆசையை நிறைவேற்றி கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது..


Advertisement

Advertisement

Advertisement