• Apr 20 2024

திடீரென நடந்த ஐடி ரெய்டு..அரசியல் சூழ்ச்சியா? நடிகர் கார்த்தி கூறிய விடயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிழகர் கார்த்தி.இவர் தற்போது பொன்னியின் செல்வன் விருமன் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் இந்த இரு படங்களின் ப்ரோமோஷன் வேலைகளும் படுவேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பிஎஸ்-1 டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கார்த்தி தமிழர் பண்பாட்டை எடுத்துக்கூறி கலக்கினார்.

விருமன் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசி இருப்பது வைரலாகி வருகிறது. மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த படத்தில் பட விழாவில் பேசிய கார்த்தி தமிழ்நாட்டிலுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பைனான்சியர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட ரைடு குறித்து பேசியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

அப்போது கடந்த வாரம் விருமன் படம் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐடி ரைடு நடப்பது வழக்கம் தான் என்று கூறிய கார்த்தி, இதன் பின்னணியில் எந்தவித அரசியல் நடவடிக்கைகளும் இருப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கிராம நாயகனாக கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். மேலும் இதில் பிரபல இயக்குநர் சங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அத்தோடு இப்படம் முதலில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் மிஷ்கினின் பிசாசு 2 அதே நாளில் வெளியாவதால் திரைப்பட தயாரிப்பாளர் வெளியீட்டு தேதியை மாற்றி ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement