விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் காண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாகவே வெளியேறியதை தொடர்ந்து சாந்தி மாஸ்டர் வீட்டைவிட்டு எலிமினேட் செய்யப்பட்டு வீட்டினைவிட்டு வெளியே அனுப்பட்டார்.
மேலும் தற்பொழுது நானும் பொம்மை மற்றும் நீயும் பொம்மை என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் போட்டியாளர்கள் கடுமையாக தமக்குள்ளே மோதிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகக் காணப்படுகின்றது.
இப்படி இருக்கும் நிலையில், தன்னுடைய் சேட்டையை நிறுத்தாமல் பெண்களை நோண்டிக்கொண்டே இருக்கிறார் அசல் கோளாறு. மகேஷ்வரி, ரச்சிதா, மைனா நந்தினி, குயின்சி, நிவாஷினி உள்ளிட்டவர்களிடம் அட்டூழியம் செய்து தடவி வருகிறார்.
#Day17 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ZXBoC7FgFT
அதேபோல் இலங்கைப்பெண் ஜனனியிடம் இப்படியான கேவலமான செயலை செய்திருக்கிறார். நேற்றைய தின பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி மற்ற போட்டியாளர்களிடம் பேசும் போது அசல் கோளாறு செய்த செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.இதனால் பெரும்பாலும் இவர் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!