• Apr 23 2024

வீடியோவால் வந்த வினை.. சக்திக்கும் மதினிக்கும் வெடித்த சண்டை.. அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இன்றைய திரையுலகத்தில் சினிமா பிரபலங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றார்களோ அந்த அளவிற்கு டிவி நட்சத்திரங்களும், யூடியூப் பிரபலங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு யூடியூப் மூலம் பல வீடியோக்களை போட்டு பலர் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெள்ளித்திரை நட்சத்திரங்களாக மாறும் அளவிற்கு பிரபலமாகியுள்ளனர். அத்தகைய யூடியூப் பிரபலங்களில் ஒருவர் தான் மதினி. இவர் யூடியூபில் வித்யாசமான கடல் வகை உணவுகளைப்பற்றி அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை சம்பாதித்து வருகின்றார்.


குறிப்பாக இவர் யூடியூபில் சக்தி என்பவருடன் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். 'தூத்துக்குடி மீனவன்' என்ற யூடியூப் சேனலில் இருவரும் போட்ட வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மதினியின் வீடியோ இணையத்தில் வெளி வராமல் இருந்தது. இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் மதினி ஏன் வீடியோக்களை வெளியிடவில்லை என அடுக்கடுக்காக கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில் சக்திக்கும் மதினிக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகத்தான் மதினி வீடியோக்களை வெளியிடவில்லை என தகவல் வந்துள்ளது.

இதுபற்றி மதினி கூறுகையில் "என் தங்கச்சிக்கு உடம்பு சரியில்லை. எனவே நான் தங்கச்சியை பார்க்க ஊருக்கு போறேன், இரண்டு நாள் கழித்து வீடியோ போடலாம் என சக்தியிடம் கூறினேன். ஆனால் ஒரு வாரம் ஆகியும் சக்தியிடம் இருந்து போன் வரவில்லை. இந்த சமயத்தில் சக்தி அவரின் மனைவியுடன் இணைந்து வீடியோ போட்டார்.

அந்த வீடியோவில் ஒருவர், சக்தி என்னால் கடனாளி ஆகிட்டார், நான் வசதியுடன் இருக்கின்றேன். சக்தி எனக்கு நிறைய பணம் கொடுத்து கடனாளி ஆகிவிட்டார் என அதில் கமெண்ட் போட்டிருந்தார். சக்தி ஒரு வீடியோ போட்டால் எனக்கு ஆயிரம் ரூபாய் தான் கொடுப்பார்.

மேலும் என் மாப்பிள்ளையிடம் ஒருவர், மதினியால் தான் சக்தி கடனாளி ஆகிவிட்டார் எனவும்  கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நான் என் தங்கச்சியின் உடைய ஊருக்கு சென்றபோது அங்கு ஒருவர், இந்த வீடியோ எல்லாம் இனி போடாத மதினி. இதனால் தேவையில்லாத கெட்ட பெயர் தான் உனக்கு வருது என கூறினார்


இதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து சக்தியும் அவரது மனைவியும் என்னை பார்க்க வந்தனர். ஏன் மதினி யாரவது உங்களை தூண்டி விட்டார்களா, அதனால் தான் வீடியோ போடாமல் இருக்குறீங்களா என கேட்டார். உடனே நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை, அடுத்தவங்க சொல்றத கேட்குறதற்கு. எனக்கு வீடியோ போட இஷ்டமில்லை. இனி வீடியோ நான் போடமாட்டேன் என அவர்களிடம் கூறினேன்.

நான் ஒன்னும் பணத்துக்கு ஆசைப்படுற ஆளில்லை. நான் ஏதோ அவரிடம் இருந்து பணத்தை பறித்ததாகவும், என்னால் அவர் கடனாளி ஆனதாகவும் வெளியில் சொல்லி வருகின்றார். மேலும் அவர் நல்லா இருந்துட்டு போகட்டும்" என மதினி கண்ணீருடன் இதனைக் கூறி இருக்கின்றார்.

மதினி வீடியோ போடாமல் இருப்பதற்கு சக்தி தான் காரணம் என்பதை அறிந்த ரசிகர்கள் மதினிக்கு தங்களது ஆதரவைக் கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement