• Apr 23 2024

அந்த நடிகருடன் மட்டும் உறவில் உள்ளாரா..? உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவர் 2016 இல் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கன்னடம், தமிழ், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்து புகழ் பெற்ற இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.னது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் தனி இடம் பிடித்த ராஷ்மிகா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில் தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் சில படங்கள் நடித்து வருகிறார். தற்போது விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என அடிக்கடி கிசுகிசு வந்து கொண்டிருக்கிறது. மேலும் அதை இருவரும் அவ்வப்போது மறுத்தும் வந்தார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் இருவருமே அது பற்றி தனித்தனியாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, “அவர் எனது டார்லிங், ஆனால், நாங்கள் இருவரும் டேட்டிங் செய்யவில்லை,” என்றும் மற்றொரு பேட்டியில் பேசிய ராஷ்மிகா, “நான் சிங்கிள்தான். யாருடனும் எந்த உறவிலும் இல்லை,” என பதிலளித்துள்ளார்.

அத்தோடு தெலுங்குத் திரையுலகத்தில் சமீபத்திய சினிமா ஜோடிகளில் பலரையும் கவர்ந்த ஜோடியாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி இருந்தது. அதனால்தான் அவர்களைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளிவருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement