• Apr 19 2024

கமலுடன் நடிக்க மறுத்த நயன்தாரா ஆர்யாவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கின்றாரா?- ரகசியத் தகவலைக் கூறிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தாலும் பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.இருப்பினும் தனது விடா முயற்சியினால் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

 தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகர் சிம்புவுடன் காதல் உறவில் இருந்தார் நயன்தாரா. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதனை தொடர்ந்து நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டார் சிம்பு. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவை காதலித்தார் நயன்தாரா. அவரை திருமணம் செய்யவும் முயன்றார். ஆனால் பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரது மனைவி கடும் கண்டனம் தெரிவித்தார். நயன்தாராவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. 

இதையடுத்து பிரபு தேவாவுடனான முறித்துக்கொண்டார். பின்னர்  சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்ததன் மூலம் அவரையே 9 வருடங்களாகக் காதலித்து தற்பொழுது திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர்.இதனால் கடந்த சில மாதங்களாகவே நடிகை நயன்தாரா பேசு பொருளாக உள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது.


இந்நிலையில் நயன்தாரா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்.அதில் பேசியிருக்கும் அவர், ஏற்கனவே காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவனை தனக்கு பாதுகாப்பு அதிகாரியாகவும் வைத்துக்கொண்டார். விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார். மருமகளாக செய்ய வேண்டிய கடமை அனைத்தையும் செய்துள்ளார்.

நயன்தாராவுக்காகவே படங்கள் ஓடுகின்றன. அந்த காலத்து ஹீரோயின்களை போல பண்பட்ட நடிகையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு சில ஆண்டுகள் ஆர்யாவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் மலையாளிகள் என்பதால் நெருக்கமாக பழகினர். ஆர்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நயன்தாரா, அவர் கதை கேட்டு ஓகே சொன்ன பிறகுதான் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து வந்தார்.


நடிகர் கமல்ஹாசனுடன் நயன்தாரா படங்களில் நடிக்க மறுத்தார். காரணம், கமலுடன் நடித்தால் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே அவருடன் நடிக்க மறுத்தார் நயன்தாரா. விக்னேஷ் சிவனை திருமணம் செய்து அதையும் பிரபல ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதித்துள்ளார் நயன்தாரா. இவ்வாறு நயன்தாரா குறித்த தகவல்களை கூறியுள்ளார் 









Advertisement

Advertisement

Advertisement