• Mar 29 2024

மீனாவும் கர்ப்பமாக இருக்கின்றாரா?- வெட்கப்பட்டு ஒழியும் தனம் மற்றும் மூர்த்தி- காமெடி ஷோவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தனம் கர்ப்பமாக இருப்பதை பற்றி மீனா ஐஸ்வர்ய மற்றும் முல்லையிடம் கூறி கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்.அக்கா இதை முதலில் சொல்லி இருக்கலாம் தானே ஏன் மறைச்சாங்க அவங்களுக்கு ஒரே வெட்கம் தான் என்று சொல்லி கலாய்க்க இவர்கள் இருவரும் சிரிக்கின்றனர். பினர் முல்லை நீங்களும் இரண்டாவது குழந்தை பெத்துக்கணும் என்று சொல்ல ஐயய்யோ என்னால முடியாது என்று சமாளிக்கிறார்.


அத்தோடு கயலை பள்ளிக்கூடம் அனுப்பவே மாமா யோாசிச்சாரு. இனிமேல் பிறக்கிற குழந்தைகளும் படிக்க புதுசா ஸ்கூல் தான் கட்டணும் என்று மீனா கேலி செய்கின்றார். தொடர்ந்து தனத்தை காணவில்லையே என்று மூவரும் தேடிப் பர்க்கும் போது தனம் வீட்டின் பின்னாலே இருந்து தனியாக கதைத்துக் கொண்டிருக்கிறார்.

பின்னர் மூவரையும் பார்த்து வெட்கப்பட மீனா தனத்தை கலாய்த்து தள்ளுகின்றார். தொடர்ந்து ஜுவா மற்றும் கதிர் சாப்பாட்டு கடையில் இருக்க மாட்டாங்க என்று நினைத்து அங்கு வரும் மூர்த்தி இவர்களைக் கண்டதும் ஓட்டம் பிடிக்க அவர்களின் மாமா தடுத்து விடுகின்றார். பின்னர் இவர்கள் மூவரும் சேர்ந்து மூர்த்தியை கலாய்த்து தள்ளுகின்றனர்.


தொடர்ந்து கதிர் தனத்திற்காக புதுக் கட்டில் கொண்டு வந்து வைக்கிறார்.தனம் இதெல்லாம் எதுக்கு என்று கேட்க கதிர் அவரை சமாதானம் செய்கிறார். தொடர்ந்து சாப்பாடு எல்லாம் கடையில் இருந்து வரும் எல்லோரும் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லும் போது மீனா இதுக்குத் தானே நான் இருக்கிறேன் நான் பார்த்துக்கிறேன் என்று கூறி தனத்தை கலாய்க்கின்றார்.

மேலும் எனக்கு குழந்தைப்பேறு வார்ட்டில் வேலை செய்வது போலவே இருக்கு என்றும் அக்காவுக்கு ஒரே வெட்கம் தான் என்று சொல்ல கதிர் சிரிக்கின்றார். பின்னர் கதிர் அண்ணியை ஓவராகக் கலாய்க்காதீங்க என்று சொல்லி விட்டு செல்கிறார். பின்னர் தனம் முல்லை ஐஸ்வர்யா மூவரும் ரூமில் இருந்து கதைத்துக் கொண்டிருக்க மீனா மட்டும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement

Advertisement