தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ,தயாரிப்பாளர், நடிகர் ஆன விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பிச்சைக்காரன்2 படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. பல நலத்திட்டங்களை செய்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் தற்பொழுது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது புற்றுநோய்க்கு உதவி தேவைப்படுபவர்கள் தன்னை தாராளமாக அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் உதவிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் விஜய் ஆண்டனி ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எல் மருத்துவமனையுடன் இணைந்து இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இணையத்தில் வெளியான இந்த தகவலை அடுத்து நெட்டிசன்கள் விஜய் ஆண்டனியை புகழ்ந்தும்,பாராட்டியும் வருகின்றனர்.
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என விஜய் ஆண்டனி உறுதி செய்துள்ளார்
Listen News!