• Apr 19 2024

மோதிரத்தை திரும்ப கொடுத்து விட்ட Girl friend ரச்சிதா தான் காரணமா?- உண்மைக் காரணத்தை போட்டு உடைத்த ராபர்ட் மாஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பக்கப்பட்ட நாளிலிருந்து வித்தியாமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் சலிப்படையாமல் விளையாடி வருகின்றனர். இதனால் இந்த சீசன் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

 கடந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார்.


இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து விலகியுள்ள ராபர்ட் மாஸ்டர், பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டில் நடந்த ஏராளமான விஷயங்கள் குறித்தும் பேசி உள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் குரூப் குரூப்பாக பிரிந்து செயல்படுவது குறித்தும், Groupism என்ற வார்த்தை பிக்பாஸ் வீட்டில் பரவலாக இருந்து வருவது பற்றியும், அசீம் உள்ளிட்ட சக போட்டியாளர்கள் எப்படி செயல்பட்டு வருகிறார்கள் என்பது பற்றியும் பல கருத்துக்களை ராபர்ட் மாஸ்டர் பகிர்ந்து கொண்டார்.அனைத்து வாரங்களிலும் பிக்பாஸ் வீட்டிற்குள் உடை வரும் சமயத்தில், மோதிரம் ஒன்று வந்தது குறித்து நெறியாளர் கேட்டிருந்தார். அந்த மோதிரம் வந்த பிறகு, ராபர்ட் மாஸ்டர் அப்செட் ஆனதாகவும் எங்களுக்கு தோன்றியது என்றும் நெறியாளர் கேட்க, இதற்கு விளக்கம் கொடுத்த ராபர்ட் மாஸ்டர், "அதுவும் இருக்கு அது என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் மோதிரம், பெங்களூர்ல இருக்காங்க. நான் அவங்க கையில பெங்களூர்ல இருக்குறப்போ போட்டது.


அது எப்படி இதுல வந்துச்சுன்னு தெரியல. எதுனால வந்துச்சுன்னு தெரியல. Maybe மூக்குத்தியால (ரச்சிதா) கூட இருக்கலாம். அதனால கூட அவங்க டிஸ்டர்ப் ஆகி இருக்கலாம். ஆனா உள்ள இருக்குறவங்க என்ன சொன்னாங்கன்னா, நான் கூட இருக்குறேன்னு நெனச்சு போட்டுக்க அனுப்பி இருக்கலாம்ன்னு சொன்னாங்க. அப்படி அனுப்பனும்னா ஏன் கையில இருக்கிறது கழற்றி அனுப்பணும். வேற ஏதாவது அனுப்பி இருக்கலாம்ல. கொஞ்சம் டிஸ்டர்ப் ஆனேன். ஆனா அதுக்கும் கேமுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" என தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement