• Apr 20 2024

பிக்பாஸ் விக்ரமன் தாய் மாதிரியா? அல்லது தந்தை மாதிரியா?- அப்பா சொன்ன அசர வைக்கும் பதில்!!

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க அண்மையில் முடிவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6.முந்தைய சீசன்களை போல இந்த முறையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், இதிலிருந்து 3 பேர் Finale விற்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதி சுற்றில் இருந்த சூழலில், யார் வெற்றி பெறுவார் என்ற விறுவிறுப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது.


இதனையடுத்து, அசீம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். தொடர்ந்து, இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்தும் பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் பிரபல சேனல் நடத்திய "மக்களுடன் விக்ரமன்" என்ற நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டிருந்தார். டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரமனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது.நிகழ்ச்சியில் விக்ரமன் வருகை தந்த போது, அங்கிருந்த பார்வையாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது விக்ரமனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பல்வேறு சுவாரஸ்ய கருத்துக்களையும் அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசி இருந்த விக்ரமன், தனக்கு அரசியல் பற்றிய விவரம் வர தந்தை ஒரு முக்கிய காரணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, "விக்ரமன் உங்க வீட்டு பிள்ளையா?, இல்ல தமிழ்நாட்டின் பிள்ளையா?" என்ற கேள்வி விக்ரமனின் தந்தையிடம் முன் வைக்கப்பட்டிருந்தது.


இதற்கு பதிலளித்த அவர், "முதல்ல ஒரு குழந்தையை பெத்தெடுக்குற வரைக்கும் தான் அது நம்ம புள்ளைங்க. அதுக்கப்புறம், அவங்க ஊர், உலகத்திற்கான குழந்தைங்க தான். எந்த குழந்தை பிறந்தாலும் அப்படித்தான்" என தெரிவித்தார். தொடர்ந்து பேசி இருந்த விக்ரமனின் தாயார், மகனுக்காக மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவு தங்களுக்கு பெருமையாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதற்கடுத்து, "விக்ரமன் எப்போதும் அமைதியாக இருக்கிறாரே. அவர் தாய் மாதிரியா? தந்தை மாதிரியா?" என கேட்கப்பட, இதற்கு விக்ரமனின் தந்தை, "தாய் மாதிரி" என சொன்னதும், "அப்போ நீங்க ரொம்ப Naughtyஆ?" என கேட்கப்பட்டது. இதற்கு "ஆமாம்" என்றும் சிரித்துக் கொண்டே விக்ரமனின் தந்தை பதில் சொல்கிறார். இப்படியே கலகலப்பான விஷயங்களாக பேசி  கொண்டிருக்க, தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஈடுபாடுடன் விக்ரமன் இருந்து வந்ததை பற்றியும் அவரது தந்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement