• Apr 19 2024

எதிர்நீச்சல் சீரியலில் இதுவெல்லாம் நடக்கின்றதா..?... வெளியே தெரியாத ரகசியங்கள் பல.. உண்மையை கூறிய கரிகாலன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனாக நடிக்கும் நடிகர் விமல் குமார் அந்த சீரியலை பற்றி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில்  ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக சீரியல்கள் என்றால் பெண் ரசிகர்கள் தான் இருப்பார்கள் ஆனால் இந்த சீரியலுக்கு ஆண் ரசிகர்களும் இளைஞர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இவ்வாறுஇருக்கையில் இந்த சீரியலில் வெற்றிக்கு காரணம் என்ன என்பது பற்றி அந்த சீரியலில் கரிகாலன் கேரக்டரில் நடிக்கும் விமல் குமார் சமீபத்தில் கூறியிருந்தார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் அதில் அவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு நமக்குள் இருக்கும் திறமையையும் உள்ளே வந்ததும் பல மடங்காக மாற்றி விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் நாளை என்ன நடக்கப் போகிறது? கதை என்னவாக இருக்கும் என்பது இன்று இரவு கூட எங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்து இருக்கிறார்.


சூட்டிங் ஸ்பாட்டில் சென்ற பிறகு இயக்குனர் என்ன மாதிரி நடிக்க வேண்டுமென்று சொல்கிறாரோ அதே மாதிரி நடித்தாலே போதும் ரசிகர்கள் கவரவதற்கு, எனக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நான் நினைக்கவும் இல்லை அதற்கு காரணம் என்னுடைய சீரியல் அணியினரும் தான். 

அத்தோடு இயக்குநரை போலவே என்னோடு நடிக்கும் சீரியல் நடிகர்களும் எனக்கு பல்வேறு நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கின்றனர்.எனினும் குறிப்பாக குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்து அவர் வசனங்கள் பேசும் போது சொருகுன மாதிரி ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று கூறுவார் என்று கூறி இருக்கிறார்.


அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவரைத்தான் பிடிக்கும் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அந்தளவிற்கு இங்கே நடிக்கும் அனைவரும் கூட்டு குடும்பமாகத்தான் நாங்கள் இருந்து வருகிறோம். மேலும் ஒரு இடத்தில் நாம் டேக் வாங்கினாலும் இயக்குநர் நினைத்தது அடுத்த நேரத்தில் வர வைத்து விடுகிறார் என்று இயக்குநரை பற்றி பெருமையாக புகழ்ந்து பேசி உள்ளார்.இந்த நிலையில் இந்த சீரியலில் ஒரு ரகடுபாயாக வளம் வந்து கொண்டிருக்கும் கரிகாலன் நிஜத்தில் ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்தவர் தானாம். அதற்கு பின்னர்  தான் இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசையினால் அதிலிருந்து வானொலி, அதைத்தொடர்ந்து தொகுப்பாளராகவும் மாறி இப்போது நடிகராகவும் மாறி இருக்கிறாராம்.


பல வாய்ப்புகளுக்காக புகைப்படம் கொடுத்து ஆடிசன் செல்வது போல தான் இந்த சீரியலுக்கும் ஆடிசனுக்கு ஆரம்பத்தில் இவர் சென்றிருந்தாராம். அப்போது இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று இவர் எதிர்பார்க்கவே இல்லையாம். பின்பு இயக்குனர் திருச்செல்வம் ஆபீஸில் இருந்து இவருக்கு அழைப்பு வந்ததும் இவர் ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லையாம். அப்போது இவருக்கு என்ன கேரக்டர் என்று தெரியவே இல்லையாம். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்று தான் நினைத்திருக்கிறார். ஆனால் கிடைத்த வாய்ப்பு இவ்வளவு பெருமையும் வரவேற்பையும் தரும் என்று இவர் எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement