• Apr 20 2024

துப்புரவு தொழில் செய்யும் இன்ஸ்டரா பிரபலத்தின் அம்மா.. நெகிழ்ச்சி வீடியோவை பகிர்ந்த திவ்யா கிருஷ்ணன்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை திவ்யா கிருஷ்ணன். இவர் சில பிரபல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னை சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் நிகழ்வுகள், பிரபலங்களை சந்திக்கும் போது எடுக்கும் புகைப்படங்கள், திருக்குறள் குறித்த விளக்க வீடியோக்கள் என திவ்யா கிருஷ்ணனின் சமூக வலைத்தள பக்கங்கள் எப்போதுமே எக்கச்சக்கமான விஷயங்களால் நிரம்பி கிடக்கவும் செய்யும்


அந்த வகையில், சமீபத்தில் நடிகை திவ்யா கிருஷ்ணன் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.சமீபத்தில் ஷூட்டிங் ஒன்றை செய்வதற்காக திவ்யா கிருஷ்ணன் சென்ற போது அப்பகுதியில் குப்பை பெருக்கும் துப்புரவு தொழிலாளர் பெண்மணி ஒருவரை கவனித்ததாக தெரிகிறது.


 தொடர்ந்து, அவரை அழைத்து வீடியோ ஒன்றில் பேசி உள்ள திவ்யா கிருஷ்ணன், வெயிலிலும் கடினம் பாராமல் உழைத்து அப்பகுதியை சுத்தமாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டு அந்த துப்புரவு தொழிலாளி அம்மாவை பாராட்டவும் செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு விஷயத்தையும் பகிரும் திவ்யா கிருஷ்ணன், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் மணிக்குட்டி என்ற இளைஞரின் தாய் தான் குப்பை பெருக்கும் பெண்மணி என குறிப்பிடும் அவர், இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, மணிக்குட்டியின் தாயான அந்த துப்புரவு தொழிலாளர் வீடியோவில் வந்து பேச தயங்கி உள்ளதாக தெரிகிறது.


ஆனால், திவ்யா கிருஷ்ணன் வற்புறுத்தி அவரை அருகே அழைத்து வீடியோவை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்.பகிர்ந்துள்ளார். "இன்னைக்கு நான் பார்த்த Sweetest Soul இவங்க தான்" என குறிப்பிட்டுள்ள திவ்யா கிருஷ்ணன், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" என திருக்குறளை குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்து பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement