பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 ஆனது இன்றுடன் 3ஆவது வாரத்தை நிறைவு செய்ய உள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுவது வழமை. அந்தவகையில் இந்தவாரம் மஹேஸ்வரி, அசீம், அசல் கோளார் ஆகியோர் டேஞ்சர் சோனில் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் "இந்த 3 பேரில் யார் வெளியே போவாங்க நீங்க சொல்லுங்க நிவா" என கமல் சரியான இடத்தை பார்த்து காய் நகர்த்தியதும், அதற்குப் பதிலளிக்கும் வகையில் "அசல் இருக்கணும் சார்" என நிவாஷினி இப்பவே தொண்டை அடைத்துப் போன குரலில் பேச ஆரம்பித்து விட்டார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அடுத்து அசல் தான் இந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியே போகிறார் என்ற செய்தியை அறிந்ததும் எப்படி அழப் போகிறார் பாருங்க என இவரைக் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் இந்த வாரம் அசல் கோளார் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என்ற சுவாரஸ்யமான தகவலும் வழமை போன்று லீக் ஆகிவிட்டது.
இந்நிலையில் அசல் கோலார் அவுட் ஆகும் ரியாக்ஷனும் அதற்கு நிவா போடப் போகும் டிராமாவையும் பார்க்க ரசிகர்கள் பலரும் என்றுமே இல்லாதவாறு வெறித்தனமாக இன்றைய எபிசோட்டிற்கு காத்திருக்கின்றனர்.
அத்தோடு கானா பாடகராக கலக்கலாக உள்ளே வந்த அசல் கோளார் வீட்டுக்குள் கொஞ்சம் கூட கண்ணியமாக நடந்து கொள்ளாமல் பெண் போட்டியாளர்களே அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருந்தார். இதனால் உடனடியாக இவரை வீட்டு விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் நினைத்த நிலையில், அசல் கோளார் இதுவரைகாலமும் தனக்கிருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்
இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது அசல் கோளாரின் பயண வீடியோ முழுவதுமே தினம் ஒரு சில்மிஷக் காட்சிகளாகத்தானே இருக்கும் என்று கூறி நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் அசல் கோளார் வெளியே போய் விட்டால் பிக்பாஸ் வீடு ரொம்பவே டல் ஆக மாறிவிடும் என்றும், இனி அந்த மாதிரி வீடியோ எல்லாம் வராதா? எனவும் கேட்டு ஃபீல் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!