• Apr 24 2024

யாழ்ப்பாணத்திற்கு படையெடுக்கும் இந்தியப் பிரபலங்கள்... ஓஹோ இதுதான் விஷயமா..? எப்போ தெரியுமா..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சமீபகாலமாகவே இந்தியாவிலிருந்து திரைப்பிரபலங்கள் பலரும் இலங்கைக்கு வருகை தந்த வண்ணமே இருக்கின்றனர். அந்தவகையில் அண்மையில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி யாழ்ப்பாணத்திலிலுள்ள பிரபல கடை திறப்பு விழா ஒன்றிற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இதனையடுத்து இன்றைய தினம் சீரியல் நடிகை ரச்சிதாவும் கொழும்பிற்கு வருகை தந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் சில விஜய் டிவி பிரபலங்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். 


அதாவது வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முற்றவெளி மைதானத்தில் Araa entertainment நடத்தும் நிகழ்ச்சியில் பாடுவதற்காக பல சூப்பர் சிங்கர் பிரபலங்கள் வருகைதரவுள்ளனர். அந்தவகையில் ஸ்ரீதர் சேனா, மானசி, ஹரிப்பிரியா உள்ளிட்ட பலரும் வருகை தர இருக்கின்றனர்.


அதுமட்டுமல்லாது கலக்கப் போவது யாரு (KPY) நிகழ்ச்சியிலிருந்தும் ஒரு சில பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேலும் மூக்குத்தி முருகன், ஷாம் விஷால், குரேஷி ஆகிய விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவர்கள் அனைவரது வரவினையும் எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement