• Apr 25 2024

கணவரின் முதல் திருமணத்தில்... மனைவி சிறு குழந்தை... அப்புறம் எப்படி திருமணம் பண்ணிக்கிட்டாங்க...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலககை பொறுத்தவரையில் அங்குள்ள பிரபலங்கள் அதிக வயது வித்தியாசம் உள்ள பெண்களை திருமணம் செய்துகொள்வது என்பது சகஜமான ஒரு விடயம் தான். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வண்ணம் தான் இருக்கின்றது. 

அந்தவரிசையில் ஒரு சில பிரபலங்களின் முதல் திருமணத்தின் போது மனைவி சிறு குழந்தையாக இருந்திருக்கின்றார். அவர்கள் யார் யார் அப்படி முதல் திருமணத்தின் போது குழந்தையாக இருந்த நடிகைகளை, பின்னர் திருமணம் செய்துகொண்ட நடிகர்கள் பற்றிப் பார்ப்போம்.


அந்தவகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகின்ற நடிகர் சைஃப் அலி கான் முதன்முதலில் 1991-ஆம் ஆண்டு தன்னைவிட 12 வயது மூத்தவரான அம்ரிதா சிங் என்பவரை மணந்தார். அப்போது நடிகை கரீனா கபூர் வெறும் 11 வயது சிறுமியாக இருந்திருக்கின்றார்.

அத்தோடு அவர் சைஃப் - அம்ரிதா திருமணத்திற்கு தனது தந்தை ரந்தீர் கபூருடன் வந்திருந்ததாகவும், அத்திருமணத்தில் அவர் சைஃபை அங்கிள் என்று அழைத்துத் தான் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. .


அதேபோன்று 'கே.ஜி.எஃப் 2' படத்தில் வில்லனாக மிரட்டிய பிரபல பாலிவுட் நட்சத்திரமான நடிகர் சஞ்சய் தத் 1987-ஆம் ஆண்டு ரிச்சா ஷர்மா என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். எனினும் துரதிஷ்டவசமாக அவரின் மனைவி 1996 இல் இறந்துவிட்டார்.

இதனால் பின்னர் 1998-இல் ரியா பிள்ளை என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ஆனது சில மாதங்களில் விவாகரத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து மூன்றாவதாக மன்யதாவை 2008 இல் திருமணம் செய்துகொண்டார். அந்தவகையில் சஞ்சய் தத்தின் முதல் திருமணத்தின் போது மன்யதாவுக்கு வெறும் 9 வயதுதான் எனக் கூறப்படுகின்றது.


அடுத்ததாக பழம்பெரும் பாலிவுட் நடிகரான ஹேமன் தர்மேந்திரா தனது இரண்டாவது மனைவி ஹேமா மாலினியை 1980-இல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் நடிகர் தர்மேந்திராவுக்கு முதல் திருமணம் நடைபெற்றபோது, ​​ஹேமமாலினி வெறும் 6 வயதுடைய சிறுமியாக இருந்திருக்கின்றார். அதாவது ஹேமமாலினி 1948-இல் பிறந்தவராவார். மேலும் தர்மேந்திரா, பிரகாஷ் கவுர் என்பவரை 1954-இல் முதல் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இவர்களை போன்றே பாலிவுட்டின் மூத்த நடிகரான கபீர் பேடியும் 4 திருமணங்களை செய்து கொண்டார். அவரது நான்காவது திருமணம் ஆனது 2016-ஆம் ஆண்டு நடந்தது. அவர் தன்னைவிட கிட்டத்தட்ட 29 வயது இளையவரான பர்வீன் துசாஞ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்தவகையில் கபீர் பேடி கடந்த 1969-ஆம் ஆண்டு ப்ரோதிமா கௌரியை முதன்முதலில் திருமணம் செய்து கொண்டபோது, பர்வீன் 6 வயதுக் குழந்தையாக இருந்திருக்கின்றார். 


அடுத்து ஹிந்தி பாடகர் கிஷோர் குமாருக்கு நான்கு திருமணங்கள் நடந்துள்ளன, அவருடைய கடைசி மனைவி லீனா சந்தவர்கர் என்பவர் கிஷோர் குமாரை 1980-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கிஷோர் குமார் 1950-இல், ரூமா குஹா தாகுர்தா என்பவரை முதன்முதலில் திருமணம் செய்துகொண்டபோது அவரின் 4 ஆவது மனைவி லீனா சந்தவர்க்கருக்கு ஒரு வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement