• Apr 18 2024

சிம்புவிடம் சிக்கி தப்பித்த த்ரிஷா- திருமணம் செய்து கொள்ளாததற்கு சொல்லும் காரணம்! அம்பலமான தகவல்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற காரணத்தை தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் முக்கிய  நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல  டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.அவரது  அழகு  அனைவரையும் கவர்ந்திருந்தது.பதுமையாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் த்ரிஷா. த்ரிஷாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.



பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர்  த்ரிஷாவின் சினிமா மார்கெட் உயர்ந்துள்ளது. இதேபோல் முன்னணி நடிகர்களின் படங்களிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன த்ரிஷாவுக்கு. 40 வயதை நெருங்கும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்வாறுஇருக்கையில்  த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகரும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வான்.

மேலும்  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர்  த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமான த்ரிஷா, அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அத்தோடு நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அத்தோடு இருவரும் வைர மோதிரத்தை மாற்றிக்கொண்டனர்.


ஆனால் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை. முறிந்து போனது. இதன் பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்தார் த்ரிஷா. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். சில ஆண்டுகள் லிவிங் டுகெதரில் குடும்பம் நடத்தினர். ஆனால் அந்த காதலும் தோல்வியை தான் சந்தித்தது. இருவரும் பிரிந்துவிட்டனர். இதன் பின்னர் த்ரிஷா சிம்புவின் காதல் வலையில் சிக்கி மீண்டு வந்தார். தற்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால் யாரையும் பிடிக்கவில்லை என திருமணம் செய்யாமல் உள்ளார் த்ரிஷா.


த்ரிஷாவுக்கும் நயன்தாரா போல் நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை உள்ளது. ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் போதெல்லாம், திருமணம் ஆகி விவாகரத்து செய்தவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள் என்று சொல்கிறார் த்ரிஷா. தனக்கும் அவர்களை போல் விவாகரத்தாகிவிடும் என்று பயமாக உள்ளது என்றும் அந்த பயத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாகவும் த்ரிஷா தெரிவித்து இருந்தார்.


அடுத்தடுத்து திருமண முறிவு காதல் முறிவு என தோல்விகளை சந்தித்த த்ரிஷா கல்யாணம் செய்தால் அதுவும் தோல்வியில் முடிந்துவிடுமோ என்று பயப்படுவதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.அத்தோடு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் யாருக்கும் கட்டுப்படாமல் இருக்கலாம் என்பதாலும் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்கிறார் பயில்வான். திருமணம் செய்து கொள்ளும் நபர் நடிக்க வேண்டாமென்று கூறலாம் அல்லது நடிக்க அனுமதி கொடுத்து சந்தேகப்பட்டால் வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதால் த்ரிஷா திருமணத்தை தள்ளி போடுவதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.




Advertisement

Advertisement

Advertisement