• Apr 23 2024

என் உடம்பில் அந்த உறுப்பை பற்றி கிண்டல் செய்கிறார்கள்... மன வேதனையில் கண் கலங்கிய நீலிமா ராணி..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

'தேவர் மகன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல படங்களிலும் துணை நடிகையாக நடித்துப் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. அத்தோடு இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகை நீலிமா ராணி பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "எனக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நான் இப்போது மீடியாவில் வளர்ந்து நிற்பதற்கு என்னுடைய கணவர் கொடுத்த ஆதரவும் உத்வேகமும் தான் காரணம். என்னை பார்க்கும் அத்தனை பேருமே பார்த்து பேசி பாராட்டுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் சிலர் என்னை திட்டியும் இருக்கிறார்கள்" என்றார்.


மேலும் "நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க நினைத்தோம். ஆனால், அது நாங்கள் நினைத்தபடி அந்தளவிற்கு நடக்கவில்லை. இதனால் நாங்கள் எல்லாத்தையும் இழந்து வாடகை வீட்டிற்கு செல்லக்கூடிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

அந்த நேரத்தில் தாலி செயின் மட்டும் தான் என்னிடம் இருந்தது. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து 2017 ஆம் ஆண்டு ஒரு சீரியல் ஒன்றை தயாரித்தோம். அது ஒரு சில எபிசோடுகள் நல்ல படியாக சென்றது. மேலும், நான் இரண்டாவது குழந்தைக்கு பிறகு தான் நான் சற்று எடை போட்டு விட்டேன். அது குறித்து சொல்ல நிறைய காரணங்கள் இருக்கின்றது. 


அந்தவகையில் சில பேர் என்னுடைய மார்பகங்களை பற்றி எல்லாம் கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு உடனே நான், எனது குழந்தைகளுக்கு பால் கொடுத்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என தோன்றும். நான் சொல்லி என்ன ஆகப் போகிறது. அதெல்லாம் நான் கடந்து விட்டு வருகிறேன்" என்று மிகவும் மன வேதனையில் கண் கலங்கியவாறு கூறியுள்ளார் நடிகை நீலிமா ராணி.

Advertisement

Advertisement

Advertisement