• Apr 25 2024

"சிவாங்கி குக் ஆனதுக்கு நான் ஆச்சரியப்படவில்லை''...நடிகை பவித்ராவின் அதிரடி பேட்டி!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பிரபலமாக இருப்பவர்கள் போட்டியாளர்களாக களமிறங்கும் சூழலில், அவர் சமையலுக்கு உதவியாக இருக்க கோமாளிகளும் இதில் களமிறங்குவார்கள். ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாகவும் இருக்கின்றனர்.

சமையலை சுற்றி இந்த நிகழ்ச்சி இயங்கி வந்தாலும் மிக கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒவ்வொரு எபிசோடும் சென்று வருவதால் பலரின் ஃபேவரைட் நிகழ்ச்சியாகவும் குக் வித் கோமாளி இருந்து வருகிறது.

இதுவரைக்கும் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள சூழலில், தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன் போல இந்த சீசனும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வரும் சூழலில் முந்தைய சீசன்களில் கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி இந்த முறை குக்காக களமிறங்கி பட்டையைக் கிளப்பியும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் இம்யூனிட்டி ஜெயித்திருந்த சிவாங்கி, எலிமினேஷன் சுற்றுக்கு செல்லாமல் அடுத்த வாரம் தகுதி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவாங்கி குறித்து நடிகை பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள  கருத்து, இணையவாசிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் மிகவும் கலகலப்பாக இந்த நிகழ்ச்சியில் வலம் வந்திருந்த சூழலில் இதற்கு பின்னர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னை சுற்றி நடைபெறும் பல்வேறு விஷயங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அப்படி இருக்கையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருந்த பவித்ரா, அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அசத்தலான பதில்களை அளிக்கவும் செய்திருந்தார். இதில் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில் ரசிகர் ஒருவர், "குக் வித் கோமாளி பாக்குறீங்களா?. சிவாங்கி வேற செம குக் ஆகிட்டாங்க" என குறிப்பிட்டுருந்தார்.

இது பற்றி தனது கருத்துக்களை தெரிவித்த நடிகை பவித்ரா, "எனக்கு தெரிந்தவரை, சிவாங்கி எதைச் செய்தாலும் 100 சதவீதத்தை கொடுத்திருக்கிறார். அவள் ஒரு குக்காக அற்புதங்களைச் செய்வதைக் கண்டு நான் நிச்சயமாக ஆச்சரியப்படவில்லை. மகிழ்ச்சி மற்றும் திறமை நிறைந்த பெண் அவர்" என நெகிழ்ச்சியுடன் பவித்ரா குறிப்பிட்டுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement