• Apr 20 2024

6 மாதம் மட்டும் என்கூட இருந்தால் உன் வாழ்க்கையே மாறிடும்- பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையிடம் அத்து மீறிய இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது பூகம்பம் கிளம்பியுள்ளது.

ஜீவா தன்னுடைய குடும்பம் தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து குடும்பத்தாருடன் சண்டை பிடித்து விட்டு தன்னுடைய மாமனார் வீட்டிலேயே தங்கி விட்டார்.ஜுவா குடும்பத்தை விட்டு பிரிந்ததை எண்ணி கவலையில் இருக்கும் குடும்பத்திற்கு புதிதாக ஐஸ்வர்யாவினால் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.


ஐஸ்வர்யாவும் பாஃக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். அவரோடு கண்ணனும் கிளம்பிப் போகப் போகின்றார். அடுத்து முல்லையும் கதிரும் கூட முல்லையின் பெற்றோர் வீட்டிற்கு போவதற்கு வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த சீரியலில் முல்லையாக நடித்து வரும் லாவண்யா அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார்.

அதில் நான் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில எனக்கு ஒரு இயக்குநரை தெரியும். அவர் என்கிட்ட நீ என்கூட ஆறு மாதம் போஃன்ல பேசிட்டு மட்டும் இருந்தால் போதும். ஆறு மாதத்திற்கு பிறகு என்னோட கெரியர் வேற லெவலில் மாத்திடுவேன் என்றாரு.நான் அப்பிடிக்கேட்ட போது அமைதியாகிட்டேன்.


இதை நாமே ஏதும் பெருசா எடுத்தால் இப்போ தான் ஆரம்பிச்சிருக்கிறேன். என்னுடைய கெரியரை முடிச்சிருவாங்க என்று பயந்ததாலஅமைதியாக இருந்திட்டேன். அவர் கிட்ட இருந்தும் விலகிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த இயக்குநர் யார் என்ற விபரத்தையும் கூறவில்லை  என்பதும் குறிப்பிடத்தக்கது.



















Advertisement

Advertisement

Advertisement