• Apr 16 2024

என்னை கூப்பிட்டிருந்தால் நானே பண்ணியிருப்பேனே- லவ்டுடே படத்தின் முக்கிய சீனை வறுத்தெடுத்த இயக்குநர் கௌதம் வாசுதேவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோமாளி என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இவரே இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் லவ் டுடே. இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.

தற்போதைய இளைய தலைமுறையினர் காதல் எப்படி இருக்கிறது என அப்பட்டமாக காட்டிய இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே, 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்தது.


மேலும் இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பெண்களுக்கு வரும் பல விதமான மெசேஜ்கள் பற்றி காட்டப்படும் ஒரு சீனில், கௌதம் மேனன் போல ஒரு நபர் பேசுவார். அந்த காட்சி படம் பார்த்தவர்களால் அதிகம் பேசப்பட்டது.

இது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கௌதம் மேனன் பேசி இருக்கிறார். "லவ் டுடே படத்தில் என்னை ஓட்டி இருந்தார்கள். என்னை அழைத்திருந்தால் நானே வந்து நடித்து கொடுத்திருப்பேன்" என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடமே கௌதம் மேனன் கூறி இருக்கிறார். இந்த விடயம் ரிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம். 


Advertisement

Advertisement

Advertisement