• Mar 29 2024

நீங்க இல்லை என்றால் நான் இல்ல- லைவ்வில் விஷ்ணுகாந்தை வெளுத்து வாங்கிய சம்யுக்தா- இப்படியெல்லாம் பண்ணினாரா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


கடந்த மார்ச் மாதம் சீரியல் பிரபலங்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்திற்கு காதல் திருமணம் நடந்தது, பிரபலங்கள் அனைவருமே வந்து வாழ்த்து கூறி இருந்தார்கள்.ஆனால் கடந்த சில நாட்களாகவே இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டார்கள் என்றனர், சமூக வலைதளங்களிலும் திருமண புகைப்படங்களை நீக்கி விட்டார்கள்.

இந்த விவகாரம் குறித்து விஷ்ணுகாந்த் ஒரு பேட்டியில், திருமணம் ஆகி 15 நாட்களுக்குள் காதலிக்கும் போது வராத பிரச்சனைகள் எல்லாம் வந்தது.எங்களுக்குள் பிரச்சனை வர காரணமே சம்யுக்தாவின் அப்பா தான், திருமணத்திற்கு முன் இரண்டாம் திருமணம் செய்து இவர்களுடன் சேராமல் இருந்த அவர் திருமணத்திற்கு பின் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தார், அங்கு தான் பிரச்சனை தொடங்கியது.


அதேபோல் அவரது தோழி ஒருவர் குறித்து என்னிடம் நிறைய கூறியிருக்கிறார், காதலிக்கும் போதே அவர் என்னை பற்றி தவறாகவே கூறி வந்தார். திருமணத்திற்கு பின் அவரது நட்பு வேண்டாமே என்று கூறினேன். நான் முக்கியமா, அவர் முக்கியமா என்று கேட்டால் தோழி தான் முக்கியம் என சம்யுக்தா கூறினார்.

இப்படி தொடர்ந்து பல பிரச்சனைகள் வரவே நாங்கள் தனியாக இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணுகாந்த். இதனை அடுத்து சம்யுக்தாவும் லைவ்வில் பேசி இருக்கின்றார். அதில் விஷ்ணுகாந்த் முன்வைத்த குற்றச் சாட்டு அனைத்திற்கும் பதில் தெரிவித்துள்ளார். அதாவது எனக்கும் இவருக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு 22 அவருக்கு 32. இருந்தாலும் நல்ல காரெக்டராக இருக்கிறாரே என்று தான் லவ்வுக்கு ஓகே சொன்னேன். ஆனால் அவர் ஆரம்பத்தில இருந்த மாதிரி இருக்கல ரொம்பவே மாறிட்டாரு.


காதலிக்கும் போது நல்லாத் தான் இருந்தாரு. ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் ரிலேஷன்சிப்பில் இருக்கிறோம் என்று போஸ்ட் போட்டதில் இருந்து தான் அவருடைய ஒரிஜினல் முகம் தெரியவே ஆரம்பிச்சிச்சு. சும்மா சண்டை பிடிப்பாரு என்னை ரொம்ப கன்ரோல் பண்ணிட்டே இருப்பாரு. ஏதாவது சொன்னால் நீ தான் இன்ஸ்டா குயின் ஆச்சே போய் போடு பிரேக் அப் ஆகிடுச்சு என்று சொல்லி மிரட்டுவாரு. நானும் தப்பே பண்ணாட்டியும் கூட அவர் கிட்டை போய் சாரி கேட்டிட்டே இருப்பேன்.எல்லாத்தையும் பொறுத்து பொறுத்து தான் இப்போ இந்த நிலமைக்கு வந்து இருக்கேன்.

கல்யாணம் பண்ணப் போறோம் என்று சொன்ன நாளிலிருந்து ஒரே பிரச்சினை தான். இன்விரேஷன் அடிச்சாங்க. அது எனக்கு பிடிக்கவே இல்லை. ஏதோ அந்த காலத்தில அடிக்கிற மாதிரி இருந்திச்சு. இன்விரேஷன் எங்க அப்பாவும் அரைவாசி அடிக்கிறாரு என்று சொன்னதும் அப்போ கல்யாண செலவும் பார்த்துப்பாங்களா என்று கேட்டாங்க அதுவே செருப்பால அடிச்ச மாதிரி தான் இருந்திச்சு.


சரி என்று கல்யாணம் நடக்க ஒரு கிழமை தான் இருக்கு இவர் 3 நாளாக எங்க போனாரு என்றே தெரில போன் எடுத்தா எடுக்கவும் இல்லை. நான் போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ளைன்ட் பண்ணி போலீஸ் எடுத்த போது தான் எனக்கு டிப்பிரஷன் கூடிடுச்சு அதனால் தான் எடுக்கல என்றாரு. கல்யாணம் என்றாலே டென்ஷன் இருக்கும் அதுக்காக இப்பிடியா பண்ணுவீங்க விஷ்ணுகாந்த். சொல்லுங்க என்று கூறினார்.

மேலும் கல்யாணம் பண்ணினாப்பிறகு எங்க அப்பா அடிக்கடி வருவாரு என்று சொன்னாங்க சீசி டிவி எடுத்து செக் பண்ணி பார்த்தாலே தெரிஞ்சிடும். அப்பா அடிக்கடி வருவாரா இல்லையா என்று. அப்பா 2,3 தடவை வந்திருக்காரு தான் அட்வைஸ்ட் பண்ணுவாரு தான் ஆனால் அதிலும் உங்களை விட்டுக்கொடுக்காமல் தான் பேசுவாரு. நீங்க என்ன என்றால் அப்பா மோசமாக பேசினாரு என்று சொன்னீங்க நீங்க பேசலையா அதுவும், ரொம்ப எங்களை அசிங்கப்படுத்தி இருக்கிறீங்க. எனக்கு யார் கூடயோ தொடர்பு இருக்கு என்று சொன்னீங்க. யார் கூட தொடர்பு இருக்கு என்று சொல்லுங்க என்றும் தெரிவித்தார்.


மேலும் நான் அவர் வேண்டுமா அல்லது என்னோட ப்ரெண்ட் வேணுமா என்று கேட்டதா சொன்னாரு. ஆனால் நான் ரெண்டு பேரும் தான் வேணும் என்றேன். என் ப்ரெண்ட் கோயிலில் பார்த்திட்டு கூட சொன்னா இவர் கூட நீ சேர்ந்து வாழ மாட்ட இவர் உனக்கு சரி வரமாட்டார் என்று சொன்னா அதே மாதிரியே நடந்திச்சு. எனக்கு 25 வயசுக்கு மேல மான் கல்யாணமே நடக்கும் என்று ஜாதகத்தில சொல்லி இருக்கிறாங்க. ஆனால் அவர் எங்க அம்மா கிட்ட பேசி கட்டாயப்படுத்தி தான் கல்யாணம் பண்ணினாரு நல்லா  வைச்ச பார்த்துப்பேன் என்று சொன்னாரு.ஆனால் எதுவுமே நடக்கல.


என் கிட்டை காசு வாங்கினது இல்லை என்று சொன்னாரு. ஆனால் அவரக்கு நான் பத்தாயிரம் கொடுத்திருக்கிறேன். அதுக்கான பில் கூட என்கிட்ட இருக்கு. எனக்கு இதுக்கு மேல இந்த லைப் செட் ஆகாது தயவு செய்து இது பற்றி யாரும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க. யூடியூபர்ஸ் யாரும் என்கிட்டை இது பற்றி கேட்காதீங்க. ரசிகர்களுக்காக தான் நான் இருக்கிறேன். என்னை வெறுக்கிறவர்களுக்கும் நன்று சொல்லுறேன். நீங்க என்னை பற்றி பேசத் தான் எனக்கு வெறியாகுது என்னை பற்றி பேசிட்டே இருங்க எனக்கு பிரச்சினை இல்லை. நான் இப்போ தான் அதிலிருந்து மீண்டு வருகின்றேன். இவ்வளவு நேரம் என்னுடைய பேச்சைக் கேட்ட எல்லோருக்கும் நன்றி என்றும் அதில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement