• Mar 29 2024

மன்னிப்புக் கேட்கா விட்டால் போலீஸில் புகார் கொடுப்பேன் -தவறாக பேசியவருக்கு நடிகை பூஜா கொடுத்த பதிலடி

stella / 10 months ago

Advertisement

Listen News!

பூஜா உமா சங்கர் இவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு நடிகை ஆவார் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் சினிமா வட்டாரங்களில் திகழ்ந்து வருகிறார்.இவருக்கு தமிழில் ஜேஜே திரைப்படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தது. 

இவர் 2004 ஆம் ஆண்டு அட்டகாசம் என்னும் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ஆதித் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு ஒருவருக்கே கிடைத்தது.


இந்த நிலையில் நடிகை பூஜா உள்ளம் கேட்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி போன்ற நிறைய திரைப்படங்களில் தமிழில் நடித்து வந்தார் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெகுவாக மக்களிடையே பாராட்டை பெற்றது மேலும் இவர் கடைசியாக சரிகமப என்னும் திரைப்படத்தில் சிங்களத்தில் நடித்திருந்தார் இந்த படமே இவருடைய கடைசி படமாகும்.

இதனை அடுத்து நடிகை பூஜா இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை அதில் பதிவிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருவார் அதில் தற்சமயம் ஒரு போட்டோவில் ஒருவர் அவருக்கு பாலியல் தொடர்பான சர்ச்சையான கமெண்டை அளித்து அவரை எரிச்சலடைய வைத்துள்ளார். அதற்கு அவர் பதில் அடியும் கொடுத்து கூறியதாவது,


உங்களுடைய அருகதை என்னவென்று புரிகிறது. தினமும் நாம் படிக்கும் செய்தித்தாள்களில் கற்பழிப்பு வன்கொடுமை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து வருகிறார்கள்.அதில் நீங்களும் ஒருவர் ஆவீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளை உபயோகித்து வருகிறீர்கள் நீங்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் நான் உடனடியாக போலீஸிடம் சென்று புகார் செய்வேன் என்று அவரை மிரட்டி பதிலடி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement