• Apr 20 2024

"முக்கிய தருணங்களில் நீ இல்லாமல் போய் விட்டாயே"... விஜய் டீவி பிரபலத்தை நினைத்து மீண்டும் கண்ணீர் சிந்தும் புகழ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டீவியில் ஒளிபரப்பான பிரபல நிகச்சியான 'குக்வித் கோமாளி' மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல ஷோக்களிலும் கலந்து கொண்டு தன்னுடைய காமெடி நிறைந்த நடிப்பினை வெளிப்படுத்தி மென்மேலும் பிரபலமடைந்தார். 


இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக கிடைத்த வரவேற்பின் மூலமாக இவருக்கு படவாய்ப்புக்களும் தேடி வந்திருந்தன. அந்தவகையில் 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரையில் படுபிஸியாக உள்ளார் புகழ். மேலும் தனது நீண்டநாள் காதலி குறித்து சமீபகாலமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்து புகழ் அப்பதிவுகள் மூலம் ரசிகர்களிடமிருந்து லைக்ஸ்களை அள்ளி வந்தார். 

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரைத் திருமணமும் செய்து கொண்டார். அதாவது விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோயிலில் புகழ்-பென்சியா ஜோடிக்கு வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.


மேலும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சூழ உறவினர்கள் வாழ்த்த, சுபநிகழ்வாக அத்திருமணம் நடந்து முடிந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள் பலரும் புகழுக்கு சமூகவலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 


திருமணம் முடிந்த கையோடு புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் இட்டிருந்தார். அந்த பதிவில், மறைந்தகாமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் திருமண நாளில், தன் மனைவியோடு சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தனக்கு வடிவேலு பாலாஜி தான் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் புகழ். 


இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமோர் பதிவினையும் இட்டிருக்கின்றார் புகழ். அதில் "நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நீ இல்லை என்று நினைக்க முடியவில்லை.

எப்பவுமே எங்களுடன் நீ இருப்பது போலவே இருக்கிறது மாமா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ, முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே... இதை எழுதும் போதே என் கண்கள் கலங்குகிறது, மிஸ் யூ மாமா" எனக் கூறி மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கின்றார். 


இந்தப் பதிவானது தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றது

Advertisement

Advertisement

Advertisement