• Apr 19 2024

யாருக்காவது நம்மை மாற்றினால் நம்முடைய மண்டை ஓடு தான் உடையும்- செல்வராகவன் போட்ட திடீர் டுவிட்

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் செல்வராகவன். இதையடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட செல்வராகவன், தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். 

இவர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார்.இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணிக்காயிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.


 பின்னர் நானே வருவேன் படத்தில் நடித்த செல்வராகவன், சமீபத்தில் மோகன் ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. இப்படி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் செல்வராகவன், கைவசம் நிறைய படங்களையும் வைத்திருக்கிறார்.


அந்த வகையில் தற்பொழுது பதிவொன்றை போட்டுள்ளார். அதில் அவர் சொல்கிறார் என கொஞ்சம் இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத் தான் இருக்க வேண்டும் என போட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement