• Apr 18 2024

மக்கள் பேசா விட்டால் நாட்டையும் அழித்து விடுவார்கள்- கடும் கோபத்தில் பிரகாஷ் ராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்ற பல்வேறு கோணங்களில் தனது திறமைகளை வளர்த்து வரும் முக்கிய பிரபலம் தான் பிரகாஷ் ராஜ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் பிளிம்பேர் விருது, தேசிய விருது, சைமா விருது ,சினிமா விருது எனப் பல விருகளையும் பெற்று சிறந்த நடிகராக வலம் வருகின்றார்.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதியின் அடுத்த படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். எப்போதும் மக்கள் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுவதிலும் தயங்காதவராக இருக்கின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது சிலைகள் எல்லா இடமும் கட்டப்படுகின்றன. வீடுகள் இடிக்கப்படுகின்றன. மக்கள் பேசா விட்டால் கூடிய விரைவில் அவர்கள் நாட்டையும் அழித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement